|
‘மாவடு வென்னும் மலர்புரை கண்ணினாய்!
பாவெடுத்துப் பாடும் பயனோக்கி - மேவி
எடுத்த இனத்தினால் இன்பஞ்சொற் சேரத்
தொடுத்த மொழிவ தமிழ்.’11
எனவும்,
‘கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற்
றிரவொடு நிற்பித்த தெம்மை - அரவொடு
மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க
மாட்டாமை பூண்ட மனம்.’2
எனவும்,
‘நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான்
பாலைநல் வாயின் மகள்.’3
எனவும்,
இன்னமிழ்தம் ஊட்டி எழில்வளைசேர் முன்கைக்கொண்
டென்னையர்பேர் சொல்லென் றிரந்தாலும் - தென்னயம்பைச்
செஞ்சுடர்வாள் வெஞ்சினவேற் சீர்ச்சேந்தன் என்னுமால்
கிஞ்சுகவாய் அஞ்சொற் கிளி.’
எனவும் இவை ஈற்றடியல்லா ஏனையடியெல்லாம் எழுத்து ஒத்து
வந்தமையாற் கட்டளை வெண்பா.
[கலம்பக வெண்பா]
‘மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும்
அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள்
பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்ற
இன்சகள ஆசனத்தான் ஈடு.’4
எனவும்,
‘தானோரும் எம்முள்ளி வாராது தானண்ணி
வானோரை வாட உரப்புங்கொல் - வானோர்
முடிக்கோடி தேய்த்தான் மூவமிழ்தம் தந்தான்
அடிக்கோடி மீளாத அன்பு?’
1. இடைக்காடனார் பாடல். 2. தண்டி. 62. மேற். 3. யா. வி. 59.
உரைமேற். 5. 4. யா. வி. 57. உரை மேற்.
|