|
[குறள் வெண்பா]
படையொடுதீ நீர்வளியாற் பங்கப் படாத
முடிபொருள் முந்தை அணு.’
இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.
[நேரிசை வெண்பா]
‘உறழ்ச்சிகே டுத்திட்டம் ஒன்றிரண்டென் றேத்தித்
திறப்படுத்த திண்ணிலகுச் செய்கை - சிறப்பித்தாங்
கெண்ணி நிலவளவோ டேய்ந்த இருமூன்றே
திண்ணியோர் கண்ட தெளிவு.’
இது சமவிருத்தங்கட்கு ஆறு பிரத்தியமும் சொன்னவாறு.
இனி, ஒருசார் ஆசிரியர், உறழ்ச்சி நில அளவுகளை விகற்பித்துச்
சொல்லுமாறு:
உறழ்ச்சி இருவகைப்படும்: முற்றக் குருவே வைத்து உறழ்தலும் முற்ற
இலகுவே வைத்து உறழ்தலும் என.
அவற்றுள் முற்றக் குருவே வைத்து உறழுமாறு:
[குறள் வெண்பா]
‘குருக்கீழ் இலகுவாம் ஏனைய ஒப்பாம்
குருத்தொகையாம் ஆதிக்கட் கூறு.’
எனக் கொள்க.
பிரத்தாரம் செய்தற்கு இலக்கணம்:
[குறள் வெண்பா]
‘ஈறு வருக்கித் திழித்திரட்டித் தன்றவற்றான்
மாறியுய்த் திங்ஙனே வைத்து.’1
(?) எனவும்,
‘ஆர்த்த படியினெதி ரச்சுன் வருமாயிற்
பேர்த்திருகால் வைக்க பெரிது.’2
எனவும் கொள்க.
1. 2 இவற்றின் சரியான பாடம் கிடைக்கவில்லை.
|