|
[நேரிசை வெண்பா]
‘இரண்டுநான் கெட்டுப் பதினாறு முப்பத்
திரண்டொடறு பத்துநான் கென்றாங் - கிரட்டித்தே
உற்கிருதி காறும் உலையா முறைமையால்
நற்குரைப்பான் நாவலனா வான்.’
‘ஒன்றாதி என்றார் வடபுலவோர் சந்தங்கட்
கென்றார் இருமூன் றெழுத்தாதி - தென்றமிழாற்
சீரிரண்டாம் என்றுரைத்தார் எல்லாரும் மேன்மூன்றோ
டோரிரண்டாம் என்றார் உயர்வு.’
[குறள் வெண்பா]
‘ஈரைஞ் ஞூற் றெண்மூன்றாம் என்பர் பிரத்தரித்தால்
ஈரைந்தாம் சந்தத்திற் கெண்.’
பத்தாம் சந்தத்திற்கு எண், ஆயிரத்து இருபத்து நான்கு என்றவாறு.
[குறள் வெண்பா]
‘மதிலிரண்டு மாவாறு வாய்ந்த வசுக்கள்
பதினைந்தாம் சந்தப் பரப்பு.’
பதினைந்தாம் சந்தத்திற்குத் தொகை, முப்பத்தீராயிரத்து எழுநூற்று
அறுபத்தெட்டு.
[குறள் வெண்பா]
‘உருவுபா ழென்பரவை யோரெட்டைந் தேழா
றிருபதாம் சந்தத்தின் எண்.’
இருபதாம் சந்தத்திற்குத் தொகை, பத்து லட்சத்து
நாற்பத்தெண்ணாயிரத்து ஐஞ்ஞூற்று எழுபத்தாறு.
[குறள் வெண்பா]
ஆறேழ் உருவுபாழ் எட்டோடு மங்கலமாம்
ஆறோடுநான் குற்கிருதிக் காம்.’
இருபத்தாறாம் சந்தத்திற்குத் தொகை, ஆறு கோடியே எழுபத்தொரு
லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்து நாலு.
|