|
வருவனவற்றையும், முதலிரண்டடியும் தம்முள் ஒப்ப எழுத்துக் குறைந்து
கடையிரண்டடியும் தம்முள் ஒப்ப எழுத்துக் குறைந்து வருவனவற்றையும்,
ஒன்றிடை விட்டுக் குன்றி வருவனவற்றையும், ஒன்றிடையிட்டு மிக்கும்
குறைந்தும் வருவனவற்றையும் ‘பாதிச்சமச் செய்யுள்’ என்றும்; இவ்
வாறின்றிச் சீர் ஒத்து மிக்கும் குறைந்தும் வருவனவற்றை (அளவழிப்பையுட்
சந்தம்) என்றும் வேண்டுவர்.
தாண்டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவர் ஒருசார் வடநூல்
வழித் தமிழாசிரியர்.
அவற்றுட் சில வருமாறு:
[கலி விருத்தம்]
‘பங்கயக் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (12)
செங்கயல் இனநிரை திளைக்கும் செல்வமும் (13)
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி (13)
அங்கயற் பிறழ்ச்சியும் அமுத1 நீரவே.’1 (13)
இது சீர் ஒத்து ஓர் அடியுள் ஓர் எழுத்துக் குறைந்து வந்தமையால்
நிசாத்து.
‘கொல்லைக் கொன்றைக் கொழுநன் றன்னை (9)
மல்லற் பொழில்வாய் மணியேர் முறுவல் (11)
முல்லைக் குறமா மடவாள் முறுகப் (11)
புல்லிக் குளிரப் பொழியாய் புயலே!’ (11)
இஃது ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்து சீர் ஒத்து வந்தமையால்,
விராட்டு.
என்னை?
[குறள் வெண்பா]
‘ஓரெழுத்துக் குன்றின் நிசாத்தாம்; விராட்டாகும்
ஈரெழுத்துக் குன்றும் எனின்.’
என்பவாகலின்.
1 சூளா. நாட்டு. 2.
பி - ம். 1 ஆறாத.
|