|
[வஞ்சித் துறை]
‘பேடையை இரும்போத்துத் (7)
தோகையால் வெயின்மறைக்கும் (8)
காடகம் இறந்தார்க்கே (7)
ஓடுமென் மனனேகாண்.’1 (7)
இஃது ஓரடியுள் ஓரெழுத்து மிக்குச் சீர் ஒத்து வந்தமையால் புரிக்கு.
[கலி விருத்தம்]
‘கலைபயில் அல்குலார் காமர் மஞ்ஞைபோன் (12)
றுலவுவர் மெல்லவே ஒண்பொன் மாநகர்; (12)
அலர்மலி வீதிகள் ஆறு போன்றுள; (12)
மலையென நிவந்துள மதலை மாடமே.’ (14)
இஃது இரண்டெழுத்து ஓரடியுள் மிக்கு சீர் ஒத்து வந்தமையால்.
சுராட்டு.
என்னை?
[குறள் வெண்பா]
‘ஓரெழுத்து மிக்காற் புரிக்காம்; சுராட்டாகும்
ஈரெழுத்து மிக்க தெனின்.’
என்பவாகலின்.
[வஞ்சித் துறை]
‘மல்லன்மா மழையார்ப்பக் (7)
கொல்லைவாய்க் குருந்திளகின; (9)
முல்லைவாய் முறுவலித்தன; (9)
செல்வர்தேர் வரவுண்டாம்.’ (7)
இது முதலடியும் நான்காம் அடியும் எழுத்துக் குறைந்து, நடு
இரண்டடியும் எழுத்து மிக்கு, நாலடியும் சீரொத்து வந்தமையால்,
யவமத்திமம்2 எனக் கொள்க.
1. யா. வி. 91 உரை மேற். 2. இது வடமொழியில் யவமத்தியயதி’
எனப்படும்.
|