பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           549

[வஞ்சித் துறை]

     ‘பேடையை இரும்போத்துத்                                 (7)
     தோகையால் வெயின்மறைக்கும்                              (8)
     காடகம் இறந்தார்க்கே                                     (7)
     ஓடுமென் மனனேகாண்.’1                                   (7)

     இஃது ஓரடியுள் ஓரெழுத்து மிக்குச் சீர் ஒத்து வந்தமையால் புரிக்கு.

[கலி விருத்தம்]

     ‘கலைபயில் அல்குலார் காமர் மஞ்ஞைபோன்                  (12)
     றுலவுவர் மெல்லவே ஒண்பொன் மாநகர்;                     (12)
     அலர்மலி வீதிகள் ஆறு போன்றுள;                         (12)
     மலையென நிவந்துள மதலை மாடமே.’                       (14)

     இஃது இரண்டெழுத்து ஓரடியுள் மிக்கு சீர் ஒத்து வந்தமையால். சுராட்டு.

     என்னை?

[குறள் வெண்பா]

     ‘ஓரெழுத்து மிக்காற் புரிக்காம்; சுராட்டாகும்
     ஈரெழுத்து மிக்க தெனின்.’

 என்பவாகலின்.

[வஞ்சித் துறை]

     ‘மல்லன்மா மழையார்ப்பக்                                  (7)
     கொல்லைவாய்க் குருந்திளகின;                              (9)
     முல்லைவாய் முறுவலித்தன;                                 (9)
     செல்வர்தேர் வரவுண்டாம்.’                                 (7)

     இது முதலடியும் நான்காம் அடியும் எழுத்துக் குறைந்து, நடு இரண்டடியும் எழுத்து மிக்கு, நாலடியும் சீரொத்து வந்தமையால், யவமத்திமம்2 எனக் கொள்க.


  1. யா. வி. 91 உரை மேற். 2. இது வடமொழியில் யவமத்தியயதி’ எனப்படும்.