பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           559

[வஞ்சித் துறை]

     ‘கற்ற நூவினார்
     செற்றம் நீக்கினார்
     வெற்றி வேந்தருக்
     குற்ற தூதரே.’

 எனவும் இவை குருவும் இலகுவும் அடி முடியளவும் முறையே வந்தமையால், சமானம்.

[கலி விருத்தம்]

     ‘காரார் தோகைக் கண்ணார் சாயற்
     றேரார் அல்குல் தேனார் தீஞ்சொல்
     போரார் வேற்கட் பொன்னே! இன்னே
     வாரார் அல்லர் போனார் தாமே.’

 இது முற்றக் குருவே வந்தமையால், ‘சமானம்’ எனப்படும்.

[வஞ்சித் துறை]

     ‘முருகு விரிகமலம்
     மருவு சினவரன
     திருவ டிகடொழுமின்
     அருகு மலமகல.’

 இது முற்ற இலகுவே வந்தமையால், ‘சமானம்’ எனப்படும்.

[வஞ்சி விருத்தம்]

     ‘கயற்க ருங்கண் அந்நலார்
     முயக்கம் நீக்கி மொய்ம்மலர்
     புயற்பு ரிந்த புண்ணியர்க்
     கியற்று மின்கள் ஈரமே.’

 இது இலகுவும் குருவும் முறையே வந்தமையால் ‘பிரமாணச் செய்யுள்’ எனப்படும்.

[கலி விருத்தம்]

     ‘துங்கக் கனகச் சோதி வளாகத்
     தங்கப் பெருநூல் ஆதியை ஆளும்