|
[நேரிசை வெண்பா]
‘தக்கவர் சம்பந்தந் தாங்கி யிவணெஞ்சா
மக்கட் டொகைஞாலந் தந்தோம்பி - மிக்கின்றோ
விண்மணந் தஞ்சாந்தந் நீவி நிரைத்தந்த
தண்மணவிற் சான்றோர் தயா.’
இதுவும் ஆறு ஆராய், நடுவுத் தகாரம் நின்று, குறட்டைச் சூழ நகர
ஒற்று நின்று, ஆர்மேல் எவ்வே ழெழுத்துநின்று, சூட்டின்மேற் பன்னிரண்டு
எழுத்துப் பெற்று முடிந்தது.
[நேரிசை வெண்பா]
‘ஆறாராய் அவ்வார்மேல் எவ்வே ழெழுத்தாகி
ஏரார்ந்த நேமிமேல் ஈராறாய்ச் - சீரார்ந்த
ஒண்குறட்டைச் சூழ நடுவோர் தகாரமேற்
றண்மணவிற் சக்கரமாந் தான்.’
இதன் வழியே எழுதிக் கண்டு கொள்க.
இனி, எட்டாரச் சக்கரம் வருமாறு:
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘கார்க்கட லொலிமா வார்ப்பொ டானாக்
கோளகட் டாவ மாழ்துய ரழுந்த
வாகந் திருநல மாகமுன் னடைமத்
தாவரை நிறீஇய மால்வரை கடிந்த
காடவர் கோன்றிரு வாரமிழ் தாடவர்க்
கடைந்த தப்புரத் தக்கது தானே.’
[நேரிசை வெண்பா]
‘ஆரெட்டாய் அவ்வார்மேல் ஐயைந் தெழுத்தாகி
ஏரொத்த நேமிமேல் எண்ணான்காய் - வாரத்தால்
வாழ்க வலிவல மாவுளதேன் மாதவர்கோன்
சூழ்தருமச் சக்கரமாச் சொல்லு.’
இதன் வழியே அதனை எழுதிக் கண்டு கொள்க.
|