|
[நேரிசை ஆசிரியப்பா]
‘பருவரை நிவந்துபுடை யிருங்கடல் வளவிய
வகன்பெருங் கிடக்கைப் பார்மிசைப் பல்வரைமுன்
மல்குவளங் கெழுமிய வசையறு நிதிய
மீதில புரிக பாரி போலவொன்
றினிதி னேத்திக் கவியெலாஞ் சொல்லவு
மீவோர்ப் பெறாதெனப் பல்கிளை தேம்பச்
செந்தீக் கட்புலத் துளங்கொண்டு துளங்கா
வோங்குமிசை யிரவலன் களிறுசெவி தாழ்த்துக்
கேழலோ டாழ்தரு நீரகடுங் கலுழி
நீந்திக் கண்டேன் களைகண் பூந்தேன்
பண்ணியல் யாழ்நல மொழியவர்
கண்மலர் புல்லிக் கலக்கநின் றோளே.’
இஃது
[கலி வெண்பா]
‘எட்டாராய் ஆர்மேற்பத் தொன்ப தெழுத்தாகி
வட்டத்துள் எண்ணான்காய் வன்குறட்டில் - எட்டும்
அரிதீரன் பாட்டென்றங் கார்நடுவண் நின்ற
இருநான் கியைவதுபார்த் துண்ணென் றொருவாமை
ஆராழி பாய்ந்த இடந்தோ றழகிதாப்
பாராளும் பல்லவ மல்லனென் - றாராய்ந்
தொருங்கமைந் துள்ளாற்கவ் வாகி யொலிநீர்க்
கருங்கடற் றண்களந்தை வேந்தன் - இருங்கழற்கால்
வண்டுரையுந் தண்டார் மருசாதி வாட்களைகண்
திண்டோ ளிணைச்செவ்வி தண்டாதாக் - கொண்டமைத்
தாசிரிய மாக்கி யதனுட் கரந்தது
மாசில்சீர் வள்ளுவன் பாட்டினுள் - ஏசிலா
‘எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.’
எனக் கொள்க.
[நேரிசை ஆசிரியப்பா]
‘தடங்கடன் மண்ணிற் றருமருள் விரும்பிய
சின்மென் கிளவித் தெய்வப் பாரியு
|