பக்கம் எண் :
 

 566                                   யாப்பருங்கல விருத்தி

     யில்லை யாகிய திரவலர் வினையெனத்
     தன்னுடன் பொத்திய தாசிடு சிதவலு
     மடுத்த மெய்யினள் கடைதலை முன்சனத்

     தீவது நோக்கியே.... (?)
     ஏனை முனைகெட வேவிய வெட்சி
     சால்பிற்றந் தோலா தாங்கே மதிநிலை
     வென்றி வேழ மிகுதி பாடி
     நின்றனள் விறலி நெருந லின்றே
     யஞ்சி பாடிய வவ்வை போல
     வறுமை யுற்ற சிறுமை மூதுரை
     தணந்து மிக்க தழற்பொலி திருமணி
     யணிந்தரைத்துஞ்ச வல்லிநின் றோளே.’

 இதுவும்,

[கலி வெண்பா]

     ‘வட்டம் இரட்டித்து வன்குறட் டுள்ளமைந்த
     எட்டாரச் சக்கரமிச் சக்கரத்தின் இட்டமையப்
     பட்ட எழுத்துப் பதிற்றெட்டொ டைந்துதலை
     இட்ட ஒருநூ றிவையிடுமா செப்பிய
     ஆழியின்மேல் நின்றங் கணிசிறந்த ஆயுங்கால்
     வாழியர்நின் றாரின்மேல் வல்லோர் வகுத்தனவும்
     ஆழி முறையிற் பதினெட்டாம் சூழியன்ற
     இன்குறட்டுள் எட்டும் இரவலர்தம் பல்கிளைக்கே
     அன்புரைக்கு மஞ்சாதான் பாட்டென்று முன்புரைத்த
     ஆராழி பாய அணிதங் கிடந்தொறவன்
     தீராச் சிறப்புப்பேர் சேர்வித்து நேரொத்த
     சவ்வகத்து வேந்துந் தெரிந்திவற்றால் இவ்வகையே
     ஆசிரியம் ஆக்கி அதனுட் கரந்துரைத்த
     நேரிசை வெண்பா நினையுங்கால் பாரில்
     ‘தருமலிந்த வண்மை தலைத்தந்து மிக்க
     திருமலிந்து தீதிலவே யாக - வுருமலிந்த
     வென்னரசன் மள்ளன் மதினிலை யேதிலர்க
     டுன்னரிய வெஞ்சினத்தான் றோள்.’

 எனக் கொள்க.