பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           617

     இவற்றின் தன்மை செயிற்றியமும், சயந்தமும், பொய்கையார் நூலும் முதலியவற்றுட் காண்க; ஈண்டு உரைப்பிற் பெருகும்.

     ‘பதினோ ராடலும் ஆடினார் யாரோ?’ எனின்,

[குறள் வெண்பா]

     ‘அல்லியம் மாயவன் ஆடல்; அதற்குறுப்புச்
     சொல்லினரா றாகத் துணிந்து.’

     ‘கொட்டி கடம்பமர்ந்தான் ஆடல்; அதற்குறுப்
     பொட்டினார் மூன்றுடன் ஒன்று.’

     ‘அறுமுகத்தன் ஆடல் குடைக்கூத் ததற்குப்
     பெறுமுறுப்பு நான்காகப் பேசு.’

     ‘குடத்தாடல் குன்றெடுத்தான் ஆடல்; அதற்கு
     மடக்கிய ஐந்துறுப் பாம்.’

     ‘முக்கணன் ஆடிற்றுப் பாண்டரங்கம்; மற்றதற்
     கொக்குமுறுப் பாறா உணர்.’

     ‘மாயவன் ஆடிற்று மல்லாடல்; மற்றதற்
     காய உறுப்புக்கள் ஐந்து.’

     ‘துடியாடல் மங்கை எழுவர தாடற்
     கடியாம் உறுப்புக்கள் ஆறு,’

     ‘கடையம் அயிராணிஆடல்; அதனிற்
     குடைய உறுப்பைந்தோ டொன்று.’

     ‘காமன தாடலாம் பேட்டா டதற்குறுப்பு
     நாமிக வாராயின் நான்கு.’

     ‘மாயவள் ஆடல் மரக்கால்; அதற்குறுப்
     பேய்வன ஈரிரண்ட டென்.’

     ‘திருவாடல் பாவை; அதற்குறுப்புத் தேரின்
     ஒருவா திரண்டுடன் ஒன்று.’

 எனக் கொள்க.

[குறள் வெண்பா]

     ‘பல்வரை நின்றாடல் ஆறு;மற் றைந்துந்தன்
     எல்லையின் வீழ்ந்தாடல் என்.’