பக்கம் எண் :
 

 64                                    யாப்பருங்கல விருத்தி

    அவற்றிற்குச் செய்யுள்:

    ‘பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்
    உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ1
    மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப்
    புனனாடன் பேரே வரும்!’

 எனவும்,

    ‘வான்றோயும் பொன்னெயிலான் வண்டார் மலரடிக்கீழ்த்
    தேன்றோய் மலர்பெய்ம்மின் சென்று.’

 எனவும் இவற்றுள் வெண்பா உரிச்சீர் நான்கும் வந்தன.

 வஞ்சி உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு:

    ‘தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி:’

 எனவும்,

    ‘மாவாழ்சுரம், புலிவாழ்சுரம், புலிபடுசுரம், மாபடுசுரம்.’

 எனவும்,

    ‘பூவாழ்பதி, திருவாழ்பதி, திருவுறைபதி, பூவுறைபதி.’

 எனவும்,

    ‘மீன்வாழ்துறை, சுறவாழ்துறை, சுறமறிதுறை, மீன்மறிதுறை.’

 எனவும்,

    ‘பூண்மென்முலை, புணர்மென்முலை, புணரிணைமுலை, பூணிளமுலை.’

 எனவும் வரும்.

    அவற்றிற்குச் செய்யுள்:

    ‘சுறமறிவன துறையெல்லாம்;
    இறவீன்பன இல்லெல்லாம்;
    மீன்றிரிவன கிடங்கெல்லாம்;
    தேன்றாழ்வன பொழிலெல்லாம்;

 எனவாங்கு,


  பி - ம்.:1 கன்னோ

  குறிப்பு:- கழல் - வீரகண்டை; கிள்ளி - சோழன்; உன்னேன் - நினையேன்; ஊழுலக்கை - நினைப்பழிதல்; என்னோ - எக்காரணத்தாலோ; கோழி - (சோழர்க்குத் தலைநகராகிய) உறையூர்; புனல் நாடன் - சோணாட்டான்.