பக்கம் எண் :
 
62  
 

2. செய்யுளியல்

பாவுக்குரிய அடியும் ஓசையும்

  21. வெண்பா வகவல் கலிப்பா வளவடி வஞ்சியென்னும்
ஒண்பா வடிகுறள் சிந்தென் 1 றுரைப்ப வொலிமுறையே
திண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் றோங்குதுள்ளல்
நண்பா வளமந்த நலமிக தூங்க னறுநுதலே.
 
     இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் - வெண்பா, வெள்ளொத்தாழிசை,
வெண்டுறை, வெளிவிருத்தம் ; ஆசிரியப்பா, ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை,
ஆசிரிய விருத்தம் ; கலிப்பா, கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்; வஞ்சிப்பா,
வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்; மருட்பா எனக் கிடந்த
செய்யுட்களாமாறு உணர்த்துதலாற் செய்யுளிய லோத்து என்னும் பெயர்த்து.
 
     இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ எனின் - வெண்பா,
ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நான்கு பாவிற்கும் அடியும் ஓசையு மாமாறு
உணர்த்....று.
 
     'வெண்பா அகவல் கலிப்பா அளவடி' எ - து. வெண்பாவும் ஆசிரியப்பாவும்
கலிப்பாவும் 2நாற்சீரடியான் வரும் எ - று.
 
     'வஞ்சி என்னும் ஒண்பா அடி குறள் சிந்து என்று உரைப்ப' எ - து. வஞ்சிப்பா
இருசீரடியானும், முச்சீரடியானும் வரும் என்று சொல்லுவர் புலவர் எ - று.
 
     'வஞ்சி என்னும் ஒண்பா' என்று சிறப்பித்தவதனால் வெண்பாவின் ஈற்றடியும்
நேரசை யாசிரிய்பாவின் ஈற்றயலடியும், கலி வெண்பாவின் ஈற்றடியும் முச்சீரடியான்
வரும்; இணைக்குற ளாசிரியப்பாவின் இடையடி இரண்டும் பலவும் குறளடியானும்
சிந்தடியானும் வரும்; கலியினுள்ளும் ஒருசார் அம்போதரங்க வுறுப்பும் இருசீரடியானும்
முச்சீரடியானும் வரப்பெறும்; அராகவுறுப்பு 3நாற்சீரின் மிக்கு வருவனவும் உள எனக்
கொள்க:
 

     (பி - ம்.) 1. றுரைப்பரொலி, 2. நாற்சீரோரடியான், 3. அளவடி முதலாக எல்லா
வடியானும் வரப்பெறும்.