பக்கம் எண் :
 

செய்யுளியல் 'வெண்பா வகவல்'

63

 
     இவை போக்கித் தத்தம் (1) இலக்கணச் சூத்திரத்துள்ளே காட்டுதும்.
 
['கலியொடு வெண்பா வகவல் கூறின்
அளவடி யதனா னடக்குமன் னவையே'
'சிந்தடி குறளடி யென்றிரண் டடியான்
வஞ்சி நடக்கும் 4வழக்கின வாகும்'
 

என்பது யாப் பருங்கலம் (சூ 27 28.)]
 

     'ஒலிமுறையே' எ - து. ஓசை முன்பு சொன்ன அடைவே எ - று.
 
     'திண்பாமலி செப்பல் சீர்சால் அகவல் சென்றோங்கு துள்ளல் நண்பா அமைந்த
நலமிகு தூங்கல்' எ - து. வெண்பா செப்ப லோசையான் வரும்;கலிப்பா
துள்ளலோசையான் வரும்; வஞ்சிப்பா தூங்கலோசையான் வரும் எ - று.
 
     'நறுநுதலே' எ - து மகடூஉ முன்னிலை.
 
     'திண்பாமலி செப்பல்' என்று சிறப்பித்தவதனாற் செப்பலோசை மூன்று
வகைப்படும். ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும் ஒழுகிசைச் செப்பலும் என,
என்னை?
 
  (2) 'வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
ஏந்திசைச் செப்ப லென்மனார் புலவர்.'

'இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
5 தூங்கிசைச் செப்ப லென்மனார் புலவர்.'

'வெண்சீர் ரொன்றலு மியற்சீர் விகற்பமும்
ஒன்றிய யாப்பே யொழுகிசைச் செப்பல்.'
 
     [இவற்றுக்குச் செய்யுள் :
 
  யாநானு நாடாமா' லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.'
 

(குறள். 397.)


     (1) இலக்கணச் சூத்திரம் என்றது காரிகைகளை.
     (2) இவை மூன்றும் சங்கயாப்பு என்பது யாப்பருங்கல விருத்தியிற் கண்டது.
 

     (பி - ம்.) 4. வழக்கினையுடைய, வழக்கினதென்ப. 5. மயக்கமில் புலவர்
தூங்கிசையென்ப, மயக்கமி றூங்க லெனவகுத் தனரே