பக்கம் எண் :
 
64

யாப்பருங்கலக் காரிகை

 
     இது வெண்சீர் வெண்டளையான் வந்தமையால் ஏந்திசைச் செப்பலோசை.
 
'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.'
 

(குறள். 1121.)

     இஃது இயற்சீர் வெண்டளையான் வந்தமையால் ஒழுகிசைச் செப்பலோசை.
 
  'கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிருந் தொழும்.'
 

(குறள், 290)

     இஃது இரண்டு தளையும் விரவி வந்தமையால் ஒழுகிசைச் செப்பலோசை.
 
     'சீர்சா லகவல்' என்று சிறப்பித்தவதனால் அகவலோசை மூன்று வகைப்படும்.
ஏந்திசை யகவலும் தூங்கிசை யகவலும் ஒழுகிசை யகவலுமென. என்னை?
 
  'நேர்நே ரியற்றளை யான்வரு மகவலும்
நிரைநிரை யியற்றளை யான்வரு மகவலும்
ஆயிரு தளையுமொத் தாகிய வகவலும்
ஏந்த றூங்க லொழுக லென்றிவை
ஆய்ந்த நிரனிறை யாகு மென்ப'
 
     இவற்றுக்குச் செய்யுள் :
 
  'போது சாந்தம்.....................துன்னுவாரே,'

(கா. 5, மேற்)

     இது நேரொன்றாசிரியத் தளையான் வந்தமையால் ஏந்திசை யகவலோசை.
 
  'அணிநிழ....................பரிசறுப்பவரே'

(கா. 5. மேற்)
 

     இது நிரையொன் றாசிரியத் தளையான் வந்தமையால் தூங்கிசை யகவலோசை.
 
  'குன்றக் குறவன்...........சுணங்கே.'

(கா. 9. மேற்)

     இஃது இரண்டு தளையும் விரவி வந்தமையால் ஒழுகிசை யகவலோசை
 
     'சென்றோங்கு துள்ளல்' என்று சிறப்பித்த வதனாற் றுள்ள லோசை மூன்று
வகைப்படும். ஏந்திசைத் துள்ளலும் அகவற் றுள்ளலும் பிரிந்திசைத் துள்ளலும் என.
என்னை?