பக்கம் எண் :
 
சொல்லணியியல்211

நேரிசை வெண்பா

எ - டு :

'அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர்

தெருளின் 1மரு வாருசிர்ச் சீரே - பொருவிலா

வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு

குன்றே தெருள வருள்'

 எனவும்,

இ - ள் : அறத்தினது அழகிய மேனியாய்!திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! தேவர்கள்அறிவிற்கும் எட்டாதாய்! அழகிய புகழையுடையாய்!குற்றமில்லாத ஏகரூபத்தையுடையாய்! உமையோடுபொருந்தின மலைபோல்வாய்! யாங்கள் தெளிய அறிவைஅருள்வாயாக எ - று.

அறிவு என்னும் சொல் வருவிக்கப்பட்டது. 

இன்னிசை வெண்பா

'மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு

பெருகொளியான் றேயபெருஞ் சோதி திருநிலா

வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த

மயரு மளவை யொழி'

எனவும் வரும்,


1. 'மருவாத சிர்ச்சீரே என்பதும் பாடம்.