நேரிசை வெண்பா
எ - டு : | 'அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர் |
| தெருளின் 1மரு வாருசிர்ச் சீரே - பொருவிலா |
| வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு |
| குன்றே தெருள வருள்' |
எனவும்,
இ - ள் : அறத்தினது அழகிய மேனியாய்!திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! தேவர்கள்அறிவிற்கும் எட்டாதாய்! அழகிய புகழையுடையாய்!குற்றமில்லாத ஏகரூபத்தையுடையாய்! உமையோடுபொருந்தின மலைபோல்வாய்! யாங்கள் தெளிய அறிவைஅருள்வாயாக எ - று.
அறிவு என்னும் சொல் வருவிக்கப்பட்டது.
இன்னிசை வெண்பா
| 'மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு |
| பெருகொளியான் றேயபெருஞ் சோதி திருநிலா |
| வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த |
| மயரு மளவை யொழி' |
எனவும் வரும்,
1. 'மருவாத சிர்ச்சீரே என்பதும் பாடம்.