பக்கம் எண் :
 
218தண்டியலங்காரம்

இது எட்டு ஆராய், ஆர்மேல் அவ்வாறெழுத்தாய்,நடுவே ககரம் நின்று, குறட்டின்மேல் ' அறமே தநமாவது'என்னும் சொல் நின்று, சூட்டின்மேல்முப்பத்திரண்டு எழுத்து நின்று முற்றுப் பெற்றது.

(10) சுழிகுளம் என்பது ஒரு செய்யுளை எவ்வெட்டுஎழுத்தாய் நான்கு வரியாக எழுதி, மேல்நின்றுகீழ்இழிந்தும் கீழ்நின்று மேல்ஏறியும், புறநின்றுவந்து உள்முடிய உச்சரித்தாலும் அவ்வரிநான்குமேயாகி அச்செய்யுளாயே முற்றுப் பெறுவது.

படம்

எ - டு : 

'கவிமுதி யார்பாவே

விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்

திருவ ழிந்துமாயா'

இ - ள் ;கவி களால் முதிர்ந்தார்செய்யும் கவியே விலையிடுதற்கரிய கவி; இடைவிடாதுமுயல்வார் செல்வம் அழிந்து கெடாது எ - று.

இதுவுமது

எ - டு :

'மதந விராகா வாமா
தநத சகாவே நீவா

நதத நதாதா வேகா

விசந விரோதா காரா'

இ - ள் : மதனா! ஆசை யில்லாதவனே! ஒளியையுடையானே! குபேரனுக்குத் தோழனாய் உள்ளானே!மேகத்தினும் அதனமான வள்ளலே! பணிப்பூணால் விரோதமான தோற்றத்தை உடையானே! நீ எங்கள் விதனங்களை நீக்கிக் காப்பாயாக எ - று.