எ - டு : | 'ஆதரந் துயர்தர வயர் தருங் கொடிக்குப் | | பூதலம் புனைபுகழ் வளவன் - தாதறாத் | | தாங்கரும் பாலன்றித் தணியுமோ தாரனங்கன் | | பூங்கரும்பால் வந்தடுத்த போர்' |
இ - ள் : ஆசையானது வருத்தத்தைத் தர அதனாலே வருந்துகிற பூங்கொடி போலும் மாதினுக்கு, பூமியை அலங்கரிக்கும்படியான புகழுள்ள சோழன் அணிந்திருக்கின்ற மகரந்தம் நீங்காத பூவரும்புகளால் ஆகிய மாலையாலன்றி, மாலையைத் தரித்த மன்மதனுடைய அழகிய கருப்பு வில்லால் வந்து சேர்ந்த போர்த் துன்பமானது தணியுமோ எ - று. இது, முன்னர் ஆசிரியம் வந்து, பின்னர் வெண்பாவாய் முடிந்தது. இங்ஙனம் முடிதற்கு இலக்கணமின்மையால் யாப்பு வழுவாயிற்று. (24) மேலதற்கோர் சிறப்புவிதி 115. | ஆரிடத் துள்ளும் அவைபோல் பவற்றுளும் | | நேரும் என்ப நெறியுணர்ந் தோரே. |
எ - ன், மேலதற்கு ஓர் சிறப்பு விதி உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் : செய்யுள் வழு ஆரிடத்துள்ளும், ஆரிடப் போலியுள்ளும் சிறுபான்மை வரையப்படா எ - று. எ - டு ; | 'கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க | | ஒண்செங் 1குருதியு ளோஒ கிடப்பதே - கெண்டிக் | | 2கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் | | அழுதகண் ணீர்துடைத்த கை' |
இ - ள் : தலைவரது பிரிவால் கூட்டம் இல்லாத யான், அப்பிரிவுத்துன்பம் உடம்பை யறுத்துத் தின்னப் பூமியில் கிடந்து பிணங்கப் பலநாளும் அழுத கண்ணீரைத் துடைத்துத் துன்பம் போக்கிய எனது கை, வாளைப் பற்றிக்கொண்டு கடகத்தில் உள்ள இரத்தினம் ஒளிவிடச் சிவந்த இரத்தத்தினுள்ளேயோ தோய்ந்து கிடப்பது எ - று. இது, பதினாறுசீர் வெண்பாவாய் யாப்பிலக்கணத்தோடு பொருந்தாது வந்தது. ஆரிடமாவன - இருடிகளாற் சொல்லப்படுவன. ஆரிடப்போலியாவன - சாவவும், கெடவும், வாழவும், மனத்தது பாடவும் வல்ல புலவரால் சொல்லப்படுவனவாம். (வி - ரை) கெண்டி - வேறுபடுத்தி; அதாவது பிரிந்து என்றபடி. (25) (9) சந்திவழு 116. | சந்தி வழுவே எழுத்திலக் கணத்துச் | | சந்தியொடு முடியாத் தன்மைத் தாகும். |
எ - ன், நிறுத்த முறையானே சந்தி வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
1. 'குருதியி னோஒ கிடந்ததே' என்பதும், 2. 'கெழுதகையில்லேன்' என்பதும் பாடங்களாகும்.
|