இ - ள் : சந்தி வழுவாவது எழுத்ததிகாரத்து ஓதப்பட்ட புணர்ச்சி யிலக்கணத்தோடு பொருந்தாது வருவது எ - று. எ - டு : | 'என்பூ டுருக இனைவேன் மனங்கலக்கும் | | பொன்பூண் சுமந்த புணர்முலையீர்! - மின்போல் | | நுடங்கிடைக்குங் காவலாய் நோக்கங் கவரும் | | படங்கிடைக்கும் அல்குற் பரப்பு' |
இ - ள் : எலும்பும் உள்ளே உருகும்படி வருந்துவேனாகிய எனது மனத்தைக் கலக்குகின்ற பொன்னாலாகிய அணிகலங்களைத் தாங்கிய இணைந்த கொங்கைகளை யுடையீர்! பாம்புப் படத்தினை எதிர்க்கும் நும் கடிதடப் பரப்பானது, மின்னலைப் போல் அசைகின்ற இடைக்குங் காவலாய், பார்ப்பவரது நோக்கம் கவரும் எ - று. இதனுள், 'பொற்பூண்' என்பது 'பொன்பூண்' என வந்தமையிற் சந்தி வழுவாயிற்று. (வி - ரை) | 'னகார இறுதி வல்லெழுத் தியையின் | | | றகாரமாகும் வேற்றுமைப் பொருட்கே' | (தொல் - புள்ளி - 37) |
என்னும் விதிப்படி பொற்பூண் என்றாக வேண்டுவது, அங்ஙனமாகாது பொன்பூண் என நிற்றலின், இது சந்தி வழுவாயிற்று. (26) மேலதற்கோர் சிறப்புவிதி 117. | இரண்டாம் வேற்றுமைக்(கு) எதிர்மறுத்தும் வருமே. |
எ - ன், அச்சந்திவழு சிறுபான்மை ஆகுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் : இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியாயின் வல்லெழுத்து மொழிக்கு முதலாய் வந்துழி, 1ஏனை வேற்றுமையோடு மாறுபட்டு முடியவும் பெறும் எ - று. எ - டு : | 'இரவி துணைத்தாள் இகல்வேந்தர் சென்னி | | விரவு மலர்பொழியும் மேவா - அரசிரிய | | மின்பொழியும் செவ்வேல் வெறியோர் இனங்கவரப் | | பொன்பொழியும் செங்கைப் புயல்' |
இ - ள் : சூரிய வமிசத்தினனான சோழனுடைய இரண்டு பாதங்களும், பகை யரசர்களுடைய சிரசிலே சேர்ந்திருக்கின்ற மலரைச் சொரியும்; செம்மையாகிய வேலானது பகையரசர்கள் பயந்தோட மின்னலைச் சொரியும்; சிவந்த கையாகிய மேகமானது வறிஞர் கூட்டங் கொள்ளும்படி பொன்னைச் சொரியும் எ - று. இதனுள், 'மலர்பொழியும்', 'மின் பொழியும்', 'பொன் பொழியும்' என இயல்பாய் முடிந்தன. என்னை சூத்திரம் என்றார்க்கு, 'இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும | | ...... ...... ...... ...... | | மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்' | (தொல் - தொகைமரபு - 15) |
என்பவாகலின் என்க. என்றார்க்கு இதுவும் இலக்கணம் அன்றே;
1. 'பொதுமுடிபொடு மாறுபட்டு' என்பதும் பாடம்.
|