‘யான் காவற் குற்றப்பட்டேன்’
எனத் தோழி கவலுமாகலான். தலைமகள்
உணர்த்தியதனாற்
பயன் என்னோ எனின், நெடுங்காலம் ஒழுகக் கருதுவான்,
‘யான் பிரிந்தபோது இவளை ஆற்று வித்துக்கொண்டு
இருக்கும்’
என்பதனானும்; ‘ஒருநாள் இதனையறியும், அறிந்தக்கால் கதுமென
ஆற்றாளாங்கொல்லோ’
என்பதனானும், இவ்வாறு உணர்த்தல் ஆற்றுதற்குக்
காரணமாம் என்பதனானும் உணர்த்தும்.
இது பொருந்தாது என்ப ஒரு சாரார்; என்னை, பகற்குறிக்கண் இது
நிகழுந்துணையும் நடவாது; இவ்வகை
வந்த சான்றோர் செய்யுளும் இல்லை.
இதனானே, ‘எவ்விடத்தானும்’
என்பது, நன்று மறுத்தற்குச்
சொல்லப்பட்டது;
மிகையன்று என்பது. ‘கூட்டக் கூடல், களவிற்கு இல்லை’ என்றிரால்,
பாங்கற்
கூட்டம், தோழியிற்கூட்டம் என்று பேரிட்டது எற்றிற்கோ எனின்,
அவர் துணையாயினமையின்
அவ்வாறு சொல்லப்பட்டது, துணையாயினாரைக்
கூட்டினார் என்னாமோ எனின், என்னாம்; கூடும்
இருவரும்
அக்கருத்தினர்அல்லராகலான்என்பது. (4)
சூத்திரம்-5
புணர்ந்த பின்றை யாங்ஙனம் ஒழுகாது
பணிந்த மொழியால் தோழி தேஎத்து
இரந்துகுறை யுறுதலுங் கிழவோன் மேற்றே.
என்பது என் நுதலிற்றோ எனின், பாங்கனானாதல், தமியாளை இடத்து எதிர்பட்டாதல் புணர்ந்த
தலைமகன், அதன் பின்னே தெருண்டு வரைதல் தலை; அல்லாவிடின், இவ்வாறு ஒழுகும் என்று, அவன்
ஒழுகுந் திறம் உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: புணர்ந்த பின்றை என்பது-பாங்கனானானும் தமியாளை இடத்து எதிர்ப்பட்டானும்
புணர்ந்த பின்றை என்றவாறு; ஆங்ஙனம் ஒழுகாது என்பது-பிற்றைஞான்றும் அப்பெற்றியே ஒழுகாது
என்றவாறு; பணிந்த மொழியான் என்பது-இழிந்த சொற்களான் என்றவாறு; இழிந்த சொல் என்பது,
வாய்பாட்டு இன்னாமை நோக்கிப் பணிந்த மொழி எனப்பட்டது! பணிந்த மொழியன்றே, ‘இத்தழை
நல்ல, இக்கண்ணி நல்ல’ என்று இங்ஙனம் கையுறை பாராட்டிச் சென்று நிற்றல்; தனக்குத் தகாது,
இழிந்தார்க்கன்றே அஃது உரியது என்பது; தோழி தேஎத்து என்பது - தோழிமாட்டு என்ற
|