நீர்மலிகடறவழ் நிலன்முதன்மற்றருஞ் சீர்மலியுலகெலாஞ் செய்தளித்தழிப்ப வல்லவனாய்முதன் மட்டீறொப்பெதி ரில்லவனாயுய ரிறையோனொருவனைப் பன்மையொழியப் பணிந்தேயிராவிருட் டன்மையொழியத் தரணியிற்றோன்றிய வாதவனிகரிரு ளகத்தறவன்னா னோதியமறைநூ லோதினனாகி யம்மெய்ப்பொருளொன் றனைவருமுணரச் செம்மெய்ப்பொருளத் திருமறைவழங்க வமைத்துளத்தெழுந்த வாசையுட்டூண்டிச் சமைத்துளயாவருந் தாங்கத்தருகென வேவியதாகவிப் பணியேற்றிநூன் மேவியவைம்பொருள் விளக்கலுணர்ந்து விரிவிலாத்தொன்னூல் விளக்கமெனும்பெயர்த் தரியவாசிரிய ரருந்தமிழ்ச்சொல்லிற் பிறநூன்முடிந்தது பெயர்த்துடன்படுத்தியும் புறநூன்முடிந்தது பொருத்தியுந்தானொரு வழிநூன்முடித்தனன் வாய்ப்பருமெய்ம்மறை |