பக்கம் எண் :
 
101பதிகம்
துணிவும், என விவ்வைந்தும் பொது வழியாகும். இவற்றை யினித் தனித்தனி
விளக்குதும். (1)
 

148.

தெய்வ வணக்கமுஞ் செய்பொருட் டொகையுந்
செப்புவ தாகுஞ் சிறப்புப் பாயிரம்.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே பதிகமா மாறுணர்த்துதும். பதிகம், பாயிரம்,
நூன்முகம், முகவுரை, புறவுரை, புனைந்துரை, அணிந்துரை, தந்துரை, இவையொரு
பொருட்கிளவி; வழக்குமுதன் மூன்றன் முகத் துப்பதிகமே நூன்முகமாக உரைத்தல்
வேண்டும். - நன்னூல். - 'ஆயிரமு கத்தானகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே.'
எ-து. மேற்கோள். பலவகைப் பாயிரத்துள்ளே ஈண்டுச் சிறப்புப்பாயிரம்
வேண்டுவதெனக் கண்டுணர்க. சிறப்புப்பாயிரம் எத்தன்மைத்தோவெனில்,
தெய்வவணக்கமாகித்தான் விரித்துரைப்பா னெடுத்த பொருளைத் தொகைப்படக்காட்டல்.
இவற்றுட்டான் மொழியானும் பொருளானும் வழுவின்றி யுரைப்பவு மற்றையவர்
மனவெறுப்பின்றிக் கொள்ளவும் எவர்க்கும் வழுவாப் பயனுண்டாகவுங் கடவுளுதவியே
வேண்டினமையாற் றெய்வவணக்கம் வேண்டுவ தென்ப தாயிற்று. பலபொருட்
டொடர்ந்து தருங்கா லிவ்வணக்க மாதியில் வேண்டுவதன்றி யொவ்வொருவகைப்
பொருண்முகத்து வேண்டாதெனக் கண்டுணர்க. எ-று. (2)
 

149.

பாயிரத் துப்பொருள் பகரிற் கேட்பார்க்
கிணக்க மாசை யியையவும் பொருட்டெளி
வுரிமை தோன்றவு முரைப்பது நெறியே.
 
     (இ-ள்.) பதிகத்துட் பொருட்டொகைப்படவுரைக்கு மாறுணர்த்துதும். பதிகத்துள்
தொகைப்படப் பொருளை யுரைத்துக்காட்டுந் தன்மையாற் கேட்பதற் கிணக்கமு மாசையு
மற்றையவரிடத் துண்டாகவும், தன் பொருடெளிவொடு தோன்றவும், பதிகவுரிமை
வழுவாதொழுகவு, முரைப்பது முறையெனக் கொள்க. இவற்றுட் கேட்போரிடத்தி
லிணக்கமாவதற் கவையடக்கமாகும். கேட்பதற்காசை யாவதற்கெடுத்த பொருளின்
மாட்சியு மருமையும் பயனுங்காட்டுவ தாகும். தெளிவுண்டாவதற் கேற்ற
பொருளொன்றாகச் சுருங்கச் சொல்லிப் பின்னதனுறுப்பென வதனை யிரண்டுமூன்று
பிரிவாகப்பிரிப்பவு மூன்று பிரிவுமிக்கது சிறப்புமன்று. மீண்டப் பிரிவிலொன்றாயினு
முன்றொகையாகச் சொன்ன பொருளி லடங்கா, பிரிதாய் நிற்றலும்வழுவே. அங்ஙனம்
இந்நாட்டசரன் கைக்கிணையில் லையென்பது தொகையாயுரைத்த புகழின்றோற்றப்
பொருளாம். இனிப் பிரிவாக வவன்கை பொன்மழைவழங்க வின்மையொழிதலும்
விண்மழை வழங்க வெம்பகை யொழிதலுமா மென்பது தொகைப்பொரு ளிரண்டாய்ப்
பிரித்தவாறு. இவ்வாறன்றி யவனே சொன்மழைவழங்க வறியாமை