பக்கம் எண் :
 
110தொன்னூல்விளக்கம்
டைக்காஞ்சிரப்பழனும், புறத்துவீசு மணமேயொப்பவகத்துமினிய தேறல் கொண்டமாங்கனி
தானு மொன்றெனவும், ஒளி பெற வெழுதிய வோவி யப்படமுமுயிர்பெற்றிமிழ் வாழுடலு
மொன்றெனவுமிவை வேறல்லவெ ன்புழியன்றோ மனமுள் ளொவ்வா வரைந்தேன்
முகத்தெழும் பொய்ய றச்சாயலு நெஞ்சில் வீற்றிருந்தினிதிற் புறத்துத்தோன்று
மெய்யறமாட் சியுமொன்றெனச் சொல்லவும்படுமே. பசியபொற்றூணிரைத்து நாட்டி,
நெற்றியிற் பவளபோதிகை யேற்றுபு, வயிரநன்மணி யுத்திரம் பாய்த்திப்
பளிக்குச்சுவர்மேன் முகிலகடுரிஞ்சுயர் சிகரமொளியின் மணியாற்கூட்டி, வானிகர்மாளிகை
யருந்தொழிற்றச்சர் வழுவறமுடிப்பினு முள்ளாளரசன் கொடுங்கோலோச்சுங் குரூரனாயி
லுலகிலாயவொரு பயனுண்டோ. அவ்வாறொரு வனருமறையோதினும்,
அரும்பொருட்கலை நூலளவறக்கற்கினும், பலநதியாடினும், பலதலஞ்சேரினும், வரைவில்
கொடுப்பினும், வழுவில்நடப்பினும், கோயின்மண்டபங் குளமுதற்பற்பல
வாயிற்றருமமெனவுவந்தியற்றினும், திரட்பொருளீட்டிய செல்வந்துறப்பினும்,
மனைநகர்நாடு மகார் மனைசுற்றமுந்துறந்தரும்வனத்திடை துணையறவுறையினும்,
இன்புறுசுவை சுகமெல்லாமறுத்தே யைம்பொறிகொன்றுடலழியநோற்பினும், ஈரறவழி
யெலாநேரச்செல்லினும், மனத்தூடிய வினைமாகளனாயிற்றனக்கொருபய னுந்
தகாதெனவுணர்க. ஒளிபெறப்பசும்பொன்புறத்துப் பூசி யுளுப்பாந்தழி மரப்பாவையாகவும்,
அழகிடத்தீட்டிய கோலங்காட்டித் தீண்டாவங்கப்பா னையாகவும், வெருவிடக்கொடும்புலி
நெடுந்தோற்போர்த்துப் பசும்புன் மேயிழிவுறுங்கோவாகவும், நன்மனத்தூய்மை
நண்ணாவறனெலா முட்பயன் கண்டவ் வளவிலனைத்தையு மெண்ணுமிறைவன் முகத்துத்
தோன்றுமே. என்பதிவையு மித்தொடக்கத்தனபலவு முவமையகத்திணையா
யெதிர்நிலையும் வகையுஞ்சிறப்புங் கலந்துவந்தவாறுகாண்க. அன்றியு மிவற்றிற் கெல்லாங்
காரணமியாதெனி லுயிரு முடலுமென விரண்டொன்றாய்ச் சேர்ந்தபொருளே
மனிதனாகையி லவற்றுளுயிரளவின்றி மிக்கதாயுயிர் சேரறமு மிக்கவெனப்படும்.
உடற்கொண்டறத்திற்குரிய செயினுமவைய றமல்ல, வறவுடலாயவற்றுள்ளமுங்
கூடினுயிருளவறமாம். நிறநன்றாயினுங் காஞ்சீரநன்றோ. மீளவு முலகிருளகலச்
செங்கதிர்பரப்பிய பருதியேபோல மனவிருளிரியத் திருவொளிக் கதிரென வேத
நூலுரைத்துத் தந்தவிறை யோன் விலக்கினநீக்கலும் விதித்தனவாக்கலு
மெய்யறமாகையிலவற்கோ ரிருளில தெளிவிற்றோன்று மனத்துட்டீயவையுளவெனிற்
புறத்துக்காட்டிய நல்வினை யறமெனப்படுவதோ. இறைவற்கேற்பன செயலேயறமெனின்
மனத்தழுக்காறவற் கேலாதிருக்க மைந்தர்ப் புகழ்வதியற்றலாலாவ தென்னோ.
தானேவிதித்த வறநல் வினைக்குத் தானேபயன்றரத் தருவனாகையி லுள்ளுந்தெரிந்த
தன்கண்வெறுப்ப வொருவன்கொண்ட மனமா சுளவெனிலினித்தா
னவற்கறப்பயனைத்தருவனோ. தோன்றியொழியுமின் னொளிபோல வுட்பயனறியாமாந்தர்
வாய்ப்புகழொன்றே மனமாசொவ்வாப்புறத்தறன்