பக்கம் எண் :
 
111விரிவு
சென்றபயனெனத் தெளிவிற்றேறிப் பொன்றின பின்னி வனால் வரும்புகழாநிற்புழி,
தானெரி நிலத்தின் வருந்தி நிந்தைப்படுவதே நீர்மையன்றெனச்
சிந்தையின்மாசிலசீரறம்போற்றுக. என்பதிவையு மித்தொடக்கத்தனபலவுங்
கருவிகாரியமென் றீரகத்திணை வந்தவாறுகாண்க. அன்றியும் கயவருந்தாமொரு
காயுங்கனியு முயிரறக்கொய்த வொருமரக் குறையு மற்றெப்பொருளும்வந்து கொளுங்கா
லுட்குறையின்மை யுணர்ந்துநாடி, கட்கினிதாகிய காஞ்சிரமொருவி முட்புறவுட்சுவை
முதிர்கனிநன் றென நோக்கியும், புறமெணா துள்ளுழிவுற்றன நீக்கியுட்டகையது
கொள்வாரன்றோ வெஞ்ஞான்றும் வானமேலினிதினழியா மெஞ்ஞானப்பயன்
றருமெய்யறமொன்றே யிவ்வாறெண்ணாதிவையே யுட்பயனவ்வவர் தாயி னுமைந்தர்
புகழுறப் புறத்துச்சாயல் போதுமென்றறத்திறத்துத் தானுளுந் தெளியாதென்னோ.
என்பதிவையு மித்தொடக்கத்தன பலவுமாக்கப் புறநிலையகத்திணையாமெனக்கொள்க.
அன்றியு "மனவிருளிரியமணிவிளக்காகத், தனியருளிறைவன் றந்தமறைநூ,
லாய்ந்துழியீண்டி யானறைந்த யாவும், வாய்ந்தமெய்யென வழங்கித்தோன்றுமே,
நும்வாயென்புகழ்நுவ ன்றுபாட, வெம்வாயெரிப் பெலிமேன்மேற்கொன்றிட,
வப்புகழ்ப்பெலிய னையநும்மன, மொப்பிலாதென்னை யொருவிநிற்றலா, லவையெலாம்
பொய்ப்பொருளாகக் கைக்கொளா, நவையென வெறுத்தனேநானே." யெனவும்,
'புணர்ந்திடத்தேவபூசையினேர்ச்சி, கொணர்ந்துழிப்பகையுட் கொண்டதென்னுணர்கி,
னகன்றப்பகைதீர்ந்தல் லாற்பூசையு, மகன்றுமறுப்பனானே.' யெனவு, 'மாசிலான்மறையென
வறைந்தபின்மனத்துண், மாசிலனாதலே மாண்புறுமனைத்தற, னல்லது தீயவை
யகத்தொளித்தினிய, வல்லுருக்காட்டன் மாணறமென்பவோ.' என்பதிவையுமித்
தொடக்கத்தனபலவு நூற்புறத்திணையாம். அன்றியும், 'ஈண்டுப்பிறிதின்வேறொருசாட்சி,
வேண்டு மோதனக்கு மெய்தானுரைப்பிற், புறத்தறச்சாயல் புகழப்பிறர்மெய்த்,
திறத்துளத்தம்மை தீயெனச்சுடச்சுடச், செறிவாய் மருளறத்தெளிந்து மெய்ம்மைகண்,
டறிவாரறப்பய னாசையுட்பட்டார்.' இதனாலன்றோ, 'வானுயர் தோற்றமெவன் செய்யுந்
தன்னெஞ்சந், தானறிகுற்றப்படின்.' என்றாரன் றியும், - 'நீட்டியசடையுமாகி நீர்மூழ்கி
நிலத்திற்சேர்ந்து, வாட்டியவுடம் பின் யாங்கள் வரகதிவிளைக்குமென்னிற்,
காட்டிடைக்காடிபோகிக் கயமூழ்கிக்காட்டுணின்றும், வீட்டினை விளைக்கும் வேண்டும்
வெளிற்றுரை விடுமி னென்றான். - நுண்டுகில் வேகலஞ்சி நெருப்பகம் பொதிந்து
நோக்கிக், கொண்டுபோய் மறையவைத்தாற் கொடுந்தழல் சுடாது மாமோ,
கண்டத்தினாவியார் தங்கடிமனைத் துறந்து காட்டுட், பண்டவா வுளநீங்கா தெற்பாவமோ
பரியு மென்றான்." இங்ஙனே புறத்தவ்வேடமன்றி யுள்ளத் தூய்மை யில்லாமுனிவர்க்குச்
சிந்தாமணியிற் சீவகன்சொன்னான். - "வானோர்புகழ்ந்து வணங்கியதுறவுந்,
தானோர்பயனிலை தாராதகத்தழுக், காறுளதே யெனி லகத்துளறத்தின், பேறுளதென்பது
பிழையோவென்பார்." என்ப