பக்கம் எண் :
 
112தொன்னூல்விளக்கம்
திவையு மித்தொடக்கத்தனபலவுங் கரிப்புறத்திணையாம். இவ்வாறேனைத்
திணைவேண்டுளி விரித்துக்கூறுக. அன்றியும், கம்பருயுத்தகாண்ட மிராவணன்
மந்திரப்படலத்திற் பரதாரத்தைச் சிறைசெய்ததின்னா வென்ற வளைவிடத்துணியும்படி
தேற்றப்பொருளாய்ப் பலவகத்திணையும் புறத்திணையுங் கொண்டுரைத்தவாறுகாண்க. -
"ஓவியமமைந்த நகர்தீயுணவிளைத்தாய், கோவியல் பழிந்ததென வேறொரு குலத்தான்,
றேவியை நயந்து சிறைவைத்த செயனன்றோ, பாவியருறும் பழியிதிற் பழியுமுண்டோ."
"என்றொருவனில் லுறைதவத்தியையிரங்க, வன்றொழிலினாய்மறை துறந்து சிறைவைத்தா,
யன்றொழிவதாயின வரக்கர்புகழையா, புன்றொழிலினா மிசைபொருந்தல் புலமைத்தோ."
என்பதிவையும் பலவுமியல்பகத்திணையாம். - "தூயவர்முறைமையே தொடங்குந்
தொன்மையோ, ராயவர்நிற்க மற்றவுணராதியாந், தீயவரறத்தினாற்றேவராயது,
மாயமோவஞ்சமோ வன்மையேகொலோ." - "அறந்துறந் தமரரை வென்ற வான்றொழிற்,
றிறந்தெரிந் திடலது தானுஞ் செய்தவ, நிறந்திறம் பாவகை யியற்று நீர்மையன், மறந்துறந்
தவர்தரும் வரத்தின் மாட்சியால்." எனவிவைகாரண வகத்திணை. - "மூவரை வென்று
மூவுலகு முற்றுறக், காவலி னின்றதுங் களிப்புங் கைம்மிக, வீவது முடிவென வீத்தல்
வல்லது, தேவரை வென்றவர் யாவர் சீரியோர்." எனப்பொதுவெனுமகத்திணை. -
"வினைகளை வென்று மேல்வீடு கண்டவ, ரெனையரென்றியும்புது மிவர்தந்தீமையான்,
முனைவரு மமரரு முன்னும் பின்னரு, மனையவர் திறத்தினையாவ ராற்றினார்."
எனவெதிர்மறையகத்திணை. - "கோனகர் முழுவதுநினது கொற்றமுஞ்,
சானகியெனும்பெயருல கினம்மனை, யானவள்கற்பினால் வெந்தவல்லது, வானரஞ்
சுட்டதென்று ணரன்மாட்சியோய்." எனமுன்னவையகத்திணை. - "மீனுடை நெடுங்கட
லிலங்கை வேந்தன்முன், றானுடைநெடுந்தவந் தளர்ந்து சாய்வதோர், மானிடமடந்தையா
லென்றன்வாய்மொழித், தேனுடையலங்கலா யின்றுதேர்தியால்.' எனநூற்புறத்திணை. -
"சொல்வரம் பெரியமாமுனி வரென்பவர் கடந்துணை யிலாதோ, ரெல்வரம்
பெரியதோளிருவரு மமரரோ டுலகம் யாவும், வெல்வரென் பதுதெரிந் தெண்ணினார்
நிருதர்வேர் முழுதும் வீயக், கொல் வரென் றுணர்தலா லவரை வந்தினிய பேருறவு
கொண்டார்." எனப்புறநிலை யகத்திணை. இவ்வாறங்ஙனமுரைத்த பலவுங்காண்க.
அன்றியுஞ் சிந்தாமணியுட் சாரணர் சீவகற்குறுகி சொல்லித் துறவிற்கவன்றுணியும்
பொருட்டுத் தேற்றப் பொருளாய்த் துறவில் 138-ஞ்செய்யுட் டொடங்கி யுரைத்த
பலவற்றைக்காண்க. அவற்றுள், "பாற்கடற் பனிமதிப் பாவைத் தீங்கதிர், மேற்படி
மிகநனி சொரிய தொப்பவே, நூற்கடன் மாதவ னுனித்த நல்லறங், கோற்கடன் மன்னனுக்
குரைக்கு மென்பவே." எனவெடுத்தபொருட்டொ கையுரைத்தவாறு. -
"அருமையினெய்தும் யாக்கையும் யாக்கையினிழிவுந், திருமை நீங்கிய துன்பமுந்
தெளிபொருட் டுணிவுங், குருமை யெய்திய குணநிலை கொடைபெறு பயனும், பெருமை
வீட்டொடு பேசுவல் கேளிது பெரி