பக்கம் எண் :
 
205செய்யுண்மரபியல்
     புறநிலை:- நீவணங்குந் தெய்வ நின்னைப் பாதுகாப்ப நின்வழி வழிமிகுவதாக
வெனக் கூறுவது.
 
     கடைநிலை:- சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந் தீர வாயில்
காக்கின்றவனுக் கென் வரவினைத் தலைவர்க் கிசையெனக் கடைக்கணின்று கூறுவது.
 
     கையறு நிலை:- கணவனொடு மனைவி கழிந்துழி யவர்கட்பட்ட வழிவுப்
பொருளெல்லாம் பிறர்க்கறிவுறுத்தித் தாமிறந்து படாதொழிந்த வாயத்தாரும் பரிசில்
பெறும் விறலியருந் தனிப் படருழந்த செயலறுநிலையைக் கூறுவது.
 
     தசாங்கப்பத்து:- நேரிசை வெண்பாவாலரசன் படைத்த தசாங்க த்தினைப் பத்துச்
செய்யுளாற் கூறுவது.
 
     தசாங்கத்தயல்:- அரசன் றசாங்கத்தினை யாசிரிய விருத்தம் பத்தி னாற்பாடுவது.
 
     அரசன் விருத்தம்:- பத்துக் கலித்துறையு முப்பது விருத்தமுங் கலித்தாழிசையு
மாக மலை - கடல் - நாட்டு - வருணனையும், நில - வருணனையும், வாண்மங்கலமும்,
தோண் மங்கலமும் பாடிமுடிப்பது. இது முடிபுனைந்த வேந்தற்காம.
 
     நயனப்பத்து:- கண்ணினைப் பத்துச் செய்யுளாற் கூறுவது.
 
     பயோதரப் பத்து:- முலையினைப் பத்துச் செய்யுளாற் கூறுவது.
 
     கைக்கிளை:- ஒருதலைக்காமத்தினை யைந்து விருத்தத்தாற் கூறுவது. அன்றி
வெண்பா முப்பத்திரண்டு செய்யுளாற் கூறுவதுமாம்.
     மங்கலவள்ளை:- உயர்குலத் துதித்த மடவரலை வெண்பா வொன்பதாலும்
வகுப்பொன்பதாலும் பாடுவது.
     தூது:- ஆண்பாலும் பெண்பாலு மவரவர் காதல் பாணன் முதலிய வுயர்திணை
யோடுங் கிள்ளை முதலிய வஃறிணை யோடுஞ் சொல்லித் தூது போய் வாவெனக்
கலிவெண்பாவாற் கூறுவது.
 
     நாற்பது:- காலமு மிடமும் பொருளுமாகிய விவற்று ளொன்றனை நாற்பது
வெண்பாவாற் கூறுவது.
 
     குழமகன்:- கலிவெண்பாவான் மாதர்கடங்கையிற் கண்ட விளைமைத்தன்மையுடைய
குழமகனைப் புகழ்ந்து கூறுவது.
 
     தாண்டகம்:- இருபத்தேழெழுத்து முதலாக வுயர்ந்த வெழுத்தடி யினவா
யெழுத்துங் குருவு மிலகுவு மொத்து வந்தன. அளவியற் றாண் டக மெனவும்,
எழுத்தொவ்வாது மெழுத்தல கொவ்வாதும் வந்தன அள வழித்தாண்டக மெனவும் படும்.
 
     பதிகம்: ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுளாற் கூறுவது.