பக்கம் எண் :

கற்பியல் சூ.9143
 

அற்ற மழிவு உரைப்பினும் என்பது - முற்காலத்துற்ற வருத்தத்தின் நீங்கினமை கூறினும் என்றவாறு.
  

உதாரணம்:
  

“எரிமருள் வேங்கை இருந்ததோகை
இழையணி மடந்தையில் தோன்று நாட
இனிது செய்தனையால் எந்தை வாழியர்
நன்மனை வதுவை அயர இவள்
பின்னிருங் கூந்தல் மலரணிந்தோயே”
1

(ஐங்குறு-294)
  

எனவரும்.
  

அற்றம்   இல்லாக்  கிழவோற்  சுட்டிய  தெய்வக்  கடத்தினும்  என்பது-குற்றமில்லாத  தலைமகனைச்
சுட்டிய தெய்வக் கடன் கொடுத்தற் கண்ணும் என்றவாறு.
  

உதாரணம்:
  

“நெஞ்சமொடு மொழிகடுத்தஞ்சு வரநோக்குந்
தாய் வட்டெறுதாக் காக்கவெம் மகனெனச்
சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற
மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே
பெற்றனம் யாமே மற்றதன் பயனே”
2
  

“வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக யாண்டுபலநந்துக
எனவோட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்


தோன்றுவதுபோல     நினைத்தபோதெல்லாம்   பெறுதற்கியலாது பலகாலம் இடையிட்டு இடையிட்டுப்
பெறுமாறு  அமைந்த களவொழுக்கக் காலத்து மிகவும் வேட்கையைத் தாங்கிப் பொறுத்திருந்தீர்போலும்.
அதனை நினைந்து யான் இப்போது வருந்துகிறேன்.

1. பொருள்  : வேங்கை மரத்திருந்த மயில் இழையணிந்த மடந்தை போலத் தோன்றும் நாடனே! நல்ல
மனையிடத்து இவளை  மணம்  செய்யும்  இந்த  நாளில்  இவள்  கூந்தலில் மலர் சூட்டினாய்; இனிய
செயலே செய்தாய் எந்தையே நீ நெடிது வாழ்க.

2. பொருள்  : நெஞ்சமும் சொல்லும் கொடியவாகத் தாயானவள் தலைவியைச் சினக்க யாம் சூளுரைத்த
தலைவனைக் காப்பாயாக என்று தெய்வம் மறைந்து துறையும் குன்றத்தில் பிறர் அறியாதபடி  மறைந்து
அத் தெய்வத்தை வணங்கினோம். அதன் பயனை இன்று நீ வரைந் தெய்தியமையால் பெற்றேம்.