“இம்மைப் பிறப்பிற் பிரியலமென்றேனாக் கண்ணிறை நீர் கொண்டனள்”1 |
(குறள்-1315) |
“தன்னை யுணர்த்தினுங்காயும் பிறர்க்குநீ ரிந்நீரராகுதிரென்று”2 |
(குறள்-1319)
|
“எரிகவர்ந்துண்ட வென்றூழ் நீளிடைச் சிறிது கண்படிப்பினுங் காண்குவென்மன்ற நள்ளென்குங்குனளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கிற் றேம்பாய் கூந்தன் மாஅயோளே”3 |
(ஐங்குறு-324) |
எனவும் வரும். இன்னும் அதனானே ஊடலைவிரும்பிக் கூறுவனவுங் கொள்க. |
“ஊடலினுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவதன்றுகொலென்று”4 |
(குறள்-1307) |
“ஊடுகமன்னோவொளியிழையாமிரப்ப நீடுக மன்னோவிரா”5 |
(குறள்-1329) |
எனவரும். இன்னுங் கற்பியற்கண் தலைவன் கூற்றாய் வேறுபட வரும் சான்றோர் செய்யுட்களெல்லாம் இதனான் அமைத்துக்கொள்க. |
|
1. பொருள் : இப்பிறவியில் நாம் பிரியேம் என்றேன்; அவ்வளவில் தன் கண்ணில் நிறைந்த நீர் கொண்டு அழுதாள். |
2. பொருள் : தன்னை யான் ஊடலுணர்த்தினாலும் அவள் இப்படித்தானே பிறரிடத்தும் (பிறமகளிரிடத்தும்) ஊடல் உணர்த்துவீர் என்று சொல்லி மேலும் புலப்பாளாவாள். |
3. பொருள் : நெருப்புக் கவர்ந்து பற்றிய ஞாயிற்றின் வெப்பம் மிக்க சுரத்திடையே நடுஇரவில் யான் சிறிது பொழுது கண் அயரினும் சுணங்கும் கூந்தலும் உடைய மாயோளைக் காண்பேன். அதனால் அவளை யான் மறக்குமாறில்லை. |
4. பொருள் :கூடியிருப்பதால் வரும் இன்பம் இவ்வூடலால் நீட்டித்துவருவது அன்றுபோலும் என எண்ணுவதால் ஊடலாலும் ஓர் துன்பம் உண்டு. |
5. பொருள் : ஒள்ளிய இழையணிந்த தலைவி இன்னும் ஊடுவாளாக; அவ்வூடலைத் தீர்க்கும் பொருட்டு யாம் அவளை இரக்க வேண்டி இராப்பொழுதும் நீட்டிப்பதாக, |