1. பொருள் : அங்கையும் அழகிய வாயும் மழலைத் தீம்சொல்லும், பொன்தொடியும் உடைய யாவரும் கண்டு விரும்பும் என் புதல்வனை தான்தேர் உருட்டிச் செல்லும் தெருவில் தனியனாய் இருப்பக் கண்டுநின் பரத்தையானவள் அக்கம்பக்கம் யாரும் இல்லாமையை நோக்கி அவனை என் உயிரே வருக எனத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு நின்றாள். அது கண்டயான் ‘நீயும் அவனுக்குத் தாய்தான்’ என்று அவளைத் தழுவிக் கூறினேன். அவள் உடன் நாணினாள்; அவள் நிலை கண்டு தலைவனே! நின்மகனுக்கு அவளும் தாயாவாள் என அவளை விரும்பியேற்றேன் அல்லனோ? |