1. அவற்றின் தொழிலாவது ஆண் தன் பெண்ணிற்கு அன்பாக ஊட்டும் செயல் முதலியன. 2. அன்புறுதலாவது தன்னிடம் அன்பு மிகக் கொள்ளல். அன்புறு தகுநகூறலாவது தன்பால் அன்பு மிகுமாறு வழியில் நிகழும் கருப்பொருள்களின் செயல்களைக் கூறல். 3. இதன் கருத்து, புணர்ந்துடன் போகாத தலைவி கிழவோன் செய்வினைக்கு அச்சம் கூறாள்; ஏன் எனின் வழியருமை அவட்கு அறியலாகாது ஆதலின் என்பது. |