பக்கம் எண் :

56தொல்காப்பியம் - உரைவளம்
 

“மையற விளங்கிய” என்னும் மருதக்கலி (81) யுள்,
  

“ஏதப்பா டெண்ணிப்புரிசை வியலுள்ளோர்
கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச்
சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின்
னாணை கடக்கிற்பார் யார்”
1

  

எனச்  சேய்  நின்றென்றதனால்   துனித்து   நின்றவாறும்,   சினவலென்றதனாற்  பிரிவு  நீட்டித்தவாறும்,
நின்னாணை கடக்கிற்பார் யாரென அஞ்சியவாறு கூறியவாறுங் காண்க.
  

“பொய்யெல்லா மேற்றித் தவறுதலைப் பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேனருளினி”
2

(கலி-95)
  

என்பதும் அச்சமாதலின் இதன் கண் அடங்கும்.
  

சென்று     கை இகந்து  பெயர்த்து உள்ளிய  வழியும்:  சென்று  தலைவன்  ஆற்றானாய்த் துனியைத்
தீர்த்தற்கு  அவளை  அணுகச்   சென்று,  கையிகந்து-அவன்  மெய்க்கட்  கிடந்த  தவறுகண்டு  தலைவி
ஆற்றாளாய்  நீக்கி   நிறுத்தலானே,  பெயர்த்து  -  அவன்  ஒருவாற்றான்  அவளாற்றாமையைச்  சிறிது
மீட்கையினாலே, உள்ளிய வழியும்-அவள்கூடக் கருதியவிடத்தும் தலைவன் கூற்று நிகழும்.
  

இதுவுந் துனி தீர்ப்பதோர் முறைமை கூறிற்று. உதாரணம் முற்கூறிய (கலி -81) பாட்டுள்,
  

“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேன்
முதிர்பூண் முலை பொருத வேதிலாள் முச்சி
யுதிர் துகளுக்க நின்னாடையொலிப்ப

வெதிர் வளிநின்றாய் நீசெல்;


1. பொருள் : ஊர்மதிலிடத்துக் காவல்புரிவோர்கள் வரைத் தம் கண்களாற் காணாதிருக்கவும் கண்டேம்
எனக்  கூறுவார் போல நீயும் தொலைவில்  இருந்து யான்  செய்யாத  குற்றத்தைச் செய்தது போலச்
சொல்லிச் சினவாதே. நின் ஆணைவழி நிற்பதன்றிக் கடப்பார்யாருளர்?-தலைவன் கூற்று.
  

2. பொருள் : நல்லவளே! பொய்யெல்லாம் சேர்த்துக் குற்றங்களை  என் தலையில் வைத்து கையோடு
கண்டுபிடித்தாய். ஏதோ தவறுடையேன் ஆனேன். இனி அருள்க-தலைவன் கூற்று.