காமக்கிழத்தி நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் என்பது-காமக்கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு1. |
நலம் பாராட்டுவாள் தலைவி. அவள் பாராட்டுதல் தீமை பற்றி வருதலான், அதனாற் சொல்லி முடிப்பது பிற பொருளாயிற்று. |
உதாரணம் |
“காண்டிகும் அல்லமோ கொண்க நின்கேளே ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவுவோளே”1 |
(ஐங்குறு-122) |
இதனான், அவள் மிக்க இளமை கூறித் தலைவனைப் பழித்தாளாம். ஒருமுகத்தாற் புலந்தவாறு, இன்னுந் தலைமகள் நலம் பாராட்டிய வழிக் கூறவும் பெறும். |
“அணிற்பல் அன்ன கொங்குமுதுர் முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர்ச்சேர்ப்ப இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை யான்ஆகியர்நின் நெஞ்சு நேர்பவளே”2 |
(குறுந்-46) |
எனவரும். |
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்குரியவை வடுவறு சிறப்பின் திரியாமைக் காய்தலும் உவத்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் என்பது-தலைவி கொடுமையொழுக்கத்துத் தோழிக்குக் கூறுதற்குரியவை குற்றமற்ற சிறப்பினையுடைய கற்பின்கண் திரியாது தலைவனைக் காய்தலும் உவத்தலும் நீக்கி நிறுத்தலும் பேணிக்கோடலும் |
|
1. காமக்கிழத்தியின் நலத்தைப் பாராட்டுவது போன்ற-ஆனால் தலைவனின் புறத்தொழுக்கமாகிய தீமையை முடித்துக் காட்டும் செயலில் கூற்று நிகழும். |
2. பொருள் : கடற்கரைத் தலைவ! இப்பிறப்பு நீங்கி மறுபிறப்பு எமக்கு வரினும் எம் கணவனாக நீயே ஆகுக. ஆனால் நின் நெஞ்சுக்கு ஏற்றவளாக யானே ஆகுக. இது என் விருப்பம் (எம் என்றது பரத்தையையும் தன்னையும்). |