வந்துழிக் காண்க. ‘உரித்து’ என்றதனால் தலைவன் இடுக்கண் கண்டுழி எற்றினான் ஆயிற்றென அவன் மொழிக்கு முன்னே வினாதலுங் கொள்க. |
181. | குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும். | (42) |
|
இளம். |
இதுவுமது. |
இ-ள் : மேற் குறித்ததற்கு எதிர் கூறுதல் அருகித் தோன்றும் என்றவாறு, அது வந்தவழிக் காண்க. |
நச். |
இதுவும் பாங்கற்குரியதோரிலக்கணங் கூறுகின்றது. |
இதன் பொருள்: குறித்து எதிர் மொழிதல் -தலைவன் குறிப்பினை அவன் கூறாமல்தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல். அஃகித் தோன்றும்-சுருங்கித் தோன்றும் என்றவாறு. |
அவன் குறிப்பறிந்து கூறல் சிறுவரவிற்றெனவே ‘காமநிலையுரைத்தல்’ (177) என்னுஞ் சூத்திரத்தின்கட் கூறிய ‘ஆவொடு பட்ட நிமித்தம்’ ஆயின் பார்ப்பான் கூறக்கேட்டுத்தான் கூறவும் பெறுமெனவும் ஏனையவுங் கிழவன் கூறாமல் தானே கூறவும் பெறுமெனவுங் கூறியவாறாயிற்று. |
சிவ. |
இச் சூத்திரம் பாங்கன் தலைவனிடம் கூற்று நிகழ்த்தும் போது கொள்ளும் குணம் கூறுகின்றது. |
இ-ள்: தலைவன் கூற்றுக்கு எதிராக நீ இப்படித்தான் நடத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டுக் கூறுதல் சிறுபான்மையாய்த் தோன்றும் என்றவாறு. |
எதிர் குறித்து மொழிதல் என மாறுக. குறித்து மொழிதலாவது ஆணைபோல் மொழிதல். |
அஃகித் தோன்றும் என்பதற்கேற்ப உதாரணமும் இன்றாயிற்று. |