1 பொருள் : தேன் உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் மலர்கள் நிறைந்த காட்டுநிலத்துக்குரிய தலைவன், அன்பிற்குரிய மையுண்ட கண்ணுடைய தன் புதல்வன் தன்எதிர் விளையாட்டில் மகிழத்தான் காதலுடன் தலைவியைத் தழீஇ இனிது இருந்தான். * தலைவன் முயங்குங் காலத்துத் தன் தவறு எண்ணி வருத்தம் உற அப்போது தலைவி புலவி கொள்ளாதிருந்தால், தலைவனைக் காமக்கிழத்தியர் போலத் தலைவியும் தாய்போற் கழறித் தழீஇக் கோடல் உரித்து என்பது இதன் கருத்து. 2 தலைமகன் முதிர்ந்தவழி என்பது தலைவன் தவறு நினைந்து வருத்தம்மிக்க விடத்து என்பதையுணர்த்தும். வெள்ளை வாரணனார் ‘தலைமகள் முதிர்ந்த வழி’ எனக்கொண்டு மனைக்கிழத்தியர் காமக் கிழத்தியரினும் வயதில் முதிர்ந்தவரானவழி என்பர். 3 புல்லுதல் மயக்கும் (கற்-10) என்னும் சூத்திரத்துக் காமக்கிழத்தியர்க்குக் கூறப்பட்ட ‘காத்த சோர்விற் |