“களங்காய்க் கண்ணி நார்முடிச்சேர லிழந்த நாடுதந்தன்ன வளம்பெரிது பெறினும் வாரலென்யானே”1 |
(அகம்-199) |
இவை வன்புறை குறித்துச் செலவழுங்குதலிற் பாலையாயிற்று. |
வினைவயின் தலைவன் மரபு |
184. | கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும். | (45) |
|
இளம். |
இ-ள்: உரையாமை யாவது2 உருபு வெளிப்பாடு. அதனை வினை நிகழுமிடத்து உரைக்கப் பெறார். தலைமக்கள் தமது வினை முடிந்த காலத்து விளங்கித் தோன்றுமென்றவாறு. |
எனவே, வினையிடத்துள் நினைப்பாராயினும் அமையும். உரைக்கப் பெறார் என்பதூஉம், வென்றிக் காலத்துக் குற்றமறத் தோன்றும் என்பதூஉம் கொள்ளப்படும். |
உதாரணம் |
“தங்கிய ஒள்ளொளியோலையதாய்த் தடமா மதின்மேல் பொங்கிய வேந்தர் எரிமுகந்தோன்றின்றுபோது கண்மேற் பைங்கயல் பாய்புனற் பாழிப் பற்றாரைப் பணித்த தென்னன் செங்கயலோடு சிலையுங் கிடந்த திருமுகமே”3 |
(பாண்டிக் கோவை) |
எனவரும். |
கண்டே பிரிந்து செல்லுதலைத் தவிர்த்தேன். ஏன் எனின் இப்போது பக்கத்தில் இருக்கும்போதே வருந்துகிறாள்; நாம் பிரிவோம் எனின் உயிர்வாழாள். |
1 களங்காய் கண்ணி நார் முடிச்சேரன் என்பான் தான் இழந்த நாட்டை மீளப் பிடித்தாற்போல பெரும் பொருளைப் பெறுவதாயிருந்தாலும் நெஞ்சே நின்னோடு வாரேன். |
2 உரையாமையாவது-உரையாமைக்குரிய பொருளாவது. அது உருவெளிப்பாடு. அது கிழவி நிலை எனப்பட்டது. |
3 பொருள்: மலர்கள் மீது கயல்பாயும் நீருடைய பாழி என்னும் ஊரில் பகைவரைப் பணிவித்த பாண்டியனது |