| உடும்பு 1 கொரீஇ வரிநுணல் அகழ்ந்து |
| நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி |
| எல்லுமுய லெறிந்த வேட்டுவன் 2அம்சுவல் |
| பல்வேறு பண்டைத் தொடைமறந் தில்லத்து |
5 | இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் |
| வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து |
| நம்வயிற் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து |
| உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை |
| நுண்முகை யவிழ்ந்த புறவின் |
10 | பொறைதலை மணந்தன்று உயவுமார் இனியே. |