(து - ம்.) என்பது, சிறைப்புறமாக வந்திருந்த தலைமகன் தலைமகளை இல்வயிற் செறித்தமையறிந்து விரைவில் வரையுமாற்றானே தோழி உழவனை நோக்கிச் சொல்லுவாள் போன்று 'உழவனே, நீ நாற்றுநடுமாறு உழச்சென்ற வயலிலுள்ள கோரையையும் குவளையையும்
1. | கொரீஇ என்பது இக்காலத்து அருகிய சொல்; பொருள் விளங்கவில்லை. கன்றுகளுக்குப்போடும் இருப்பு முள்ளாலாகிய வாய்க்கூட்டுக்குக் "கொரி" என்று திருநெல்வேலியை அடுத்த ஊர்களில் வழங்கப்படுகிறது; மாட்டுமடியில் ஊட்டச்சென்றால் அம்முள் மடியில் குத்துந் தன்மையா யிருத்தலால் அந்தப் பொருளைக்கொண்டு குத்திப் பிடிப்பதாக உரையெழுதினேன். குத்தாமலே பிடித்து வாலைக் கழுத்திற்பிணித்து வளையமாகக் காவிக் கொணர்தலுமுண்டு; கொரீஇ என்பதற்கு வேறு பொருள் விளக்கமாகத் தெரிகிறவரையில் குத்து என்பதைக் கொள்க. |