பக்கம் எண் :


105


அழித்துவிடாதே யுழுவாய், அவற்றை இவள் வளையாகவும், உடையாகவும் கொள்ளு' மென இல்வயிற்செறித்தமை தோன்றக் கூறா நிற்பது.

     (இ - ம்.) இதனை "களனும் பொழுதும் . . . . . . . . .அனை நிலைவகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 22) என்னும் விதியின் கண் வகை என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின் 
    
பெருநெற் பல்கூட் டெருமை உழவ! 
    
கண்படை பெறாது தண்புலர் விடியல் 
    
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு  
5
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு  
    
கவர்படு கையை கழும மாந்தி  
    
1 நீருறு செறுவில் நாறுமுடி யழுத்தநின் 
    
2 நடுந ரோடுநீ சேறி யாயின்வண் 
    
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மின் 
10
மாயிருங் கூந்தல்3 மடந்தை 
    
ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே. 

     (சொ - ள்.) மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின் நெல் பல்பெரு கூடு எருமை உழவ-மலையைச் செய்து வைத்தாற் போன்ற நிலை பொருந்திய உயர்ச்சியையுடைய மிக்க நெற்களையுடைய பல பெரிய சேர்களைக் கட்டி வைத்திருக்கின்ற எருமையைப் பூட்டி உழுகின்ற உழவனே !; கண்படை பெறாது தண்புலர் விடியல் கருங் கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மல் பேருஞ் சோறு - நீ இரவிலே தூங்காது குளிர்ச்சியையுடைய இருள் நீங்கும் வைகறைப் பொழுதிலே கரிய கண்களையுடைய வரால் மீனைப் பெரியனவாகத் தடிந்த தசையாகிய ஆணத்திலே பிறழவிட்ட மிளிர்வையுடனே உணவுக்குரிய அரிசியாலாக்கிய மிக்க சோற்றுத்திரளையை; கவர்படுகையை கழும மாந்தி நீர் உறு செறுவில் நாறுமுடி அழுத்தநின் நடுநரொடு நீ சேறியாயின் - விருப்பமிக்க கையையுடையையாய் நிறைய மயக்கமேறவுண்டு நீர்மிக்க சேற்றிலே நாற்றுமுடிகளை நடுதற்கு நின் உழத்தியரோடு உடன் செல்லுவையாயின்; வண் சாயும் நெய்தலும் ஓம்புமதி - நீ உழுகின்ற வயலிலுள்ள வளமிக்க கோரைகளையும் நெய்தல்களையும் களையெனக் களையாது பாதுகாப்பாய்; எம்மின் மா இருங் கூந்தல் மடந்தை அவை

  
 (பாடம்) 1. 
நீலச்செறு.
 2. 
அடுநரோடு சேறியானவரை.
 3. 
மடந்தைக்கு.