(து - ம்.) என்பது, தலைவன் இரவுக்குறி வருதலையறிந்த தோழி தலைவியை நோக்கி "இரவெல்லாம் காமவேட்கையால் நோய்கொண்டு புலம்பியதறிந்த நம் அன்னை நீ ஏன் தூங்குவாயல்லையோ வென்றாட்கு மெல்ல என்நெஞ்சினுள்ளே கானகநாடனைக் கருதினோர்க்குத் தூக்கமும் வருமோவென்று கூறினே"னெனத் தங்களுடைய துன்பத்தை அவனுணர்ந்து விரைய வரையுமாற்றாற் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் நயம்புரியிடத்தும் என்பதன் கண் அமைத்துக்கொள்க.
| கேளாய் எல்ல தோழி ! அல்கல் |
| வேணவா நலிய வெய்ய உயிரா |
| ஏமான் பிணையின் வருந்தினே னாகத் |