பக்கம் எண் :


107


    
துயர்மருங் கறிந்தனள் போல அன்னை 
5
துஞ்சா யோவென் குறுமக ளென்றலிற் 
    
சொல்வெளிப் படாமை மெல்லவென் நெஞ்சிற் 
    
படுமழை பொழிந்த பாறை மருங்கில் 
    
சிரல்வா யுற்ற தளவிற் பரலவற் 
    
கான்கெழு நாடற் படர்ந்தேர்க்குக் 
10
கண்ணும் படுமோ என்றிசின் யானே. 

     (சொ - ள்.) எல்ல தோழி கேளாய் அல்கல் வேணவா நலிய வெய்ய உயிரா - ஏடி தோழீ ! யான் கூறுகின்ற இதனைச் கேட்பாயாக ! நேற்றிரவில் வேட்கை மிகுதியாலுற்ற ஆசைப்பெருக்கமானது துன்புறுத்தலாலே வெப்பமாகப் பெருமூச்செறிந்து; ஏ மான் பிணையின் வருந்தினேனாக - அம்புபட்ட மான்பிணைபோல வருத்த முற்றேனாக; அன்னை துயர் மருங்கு அறிந்தனள் போல என் குறுமகள் துஞ்சாயோ என்றலின் - அப்பொழுது அன்னை யானுற்ற துன்ப மிகுதியை அறிந்தாள் போல என்னை நோக்கி 'என்னிள மகளே ! நீ தூங்குவாயல்லையோ என்றலும்; சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சின் - யான் சொல்வது வெளியிலே தெரியாதபடி மெல்ல என் நெஞ்சினுள்ளே; படுமழை பொழிந்த பாறை மருங்கில் சிரல்வாய் உற்ற தளவின் பரல் அவல் கான்கெழு நாடன் படர்ந்தோர்க்கு - மிக்க மழை பொழிந்த கற்பாறை யருகிலே பூத்த சிச்சிலிப் பறவையின் வாய் போன்ற அரும்புகளையுடைய முல்லையும் பரல்கள் நிரம்பிய பள்ளங்களும் உடைய (விளங்கிய) காடு சூழ்ந்த நாட்டையுடைய தலைமகனைக் கருதியிருப்போர்க்குக் கண்ணுறக்கமும் வாரா நிற்குமோ ? என்றேன் காண்; எ - று.

     (வி - ம்.) எல்ல; இருபாற் பொதுச்சொல். அல்கல் - இரவு. வேணவா - வேட்கையாலுண்டாகிய அவர்; 'வேட்கை, அவா' என்னுமிருசொல்லும் "செய்யுண் மருங்கின்" (தொல்-எழுத்- 288) என்ற சூத்திர விதிப்படி கெட்டு மருவி முடிந்தது, ஏ - அம்பு. படர்தல் - நினைத்தல். இது தலைவியைத் தோழி தானாகக் கொண்டு கூறியது, தான் அவள் என்னும் வேற்றுமையிலளாதலின்; இதற்கு முன்பு 28 ஆஞ் செய்யுளுரையிற் கூறிய விதியை ஈண்டுரைத்துக்கொள்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவறிவுறுத்தல்.

     (பெரு - ரை.) பரல் ஆகுபெயராக மேட்டுநிலத்தைக் குறித்து நின்றது. எனவே, மிசையும் அவலும் உடைய கான் என்பதாயிற்று. "அவலா கொன்றோ மிசையா கொன்றோ" (புறம்- 187)எனப் புறத்தினும் வருதல் காண்க. அளியுடைமையும் அஃதின்மையும் ஒருங்கேயுடையான் என இறைச்சியிற் றோன்றுமாறு பரல் அவல் கான்கெழு நாடன் என்றாள்.