(து - ம்.) என்பது, தலைமகன் பிரிந்தவிடத்துத் தலைமகள் வருந்தியதறிந்த தோழி அவன்பால் தூதுவிடக் கருதுதலும் அதனையறிந்த தலைவி தோழியை நோக்கி, 'நம்மைக் கைவிட்ட அவரைக் கருதா தொழிக; உள்ளம் அவர்பாற் சென்றமையால் என்னுடம்பு வறிதாயிரா நின்றது; இனி வரினும் நமது நோய்க்கு மருந்தாக மாட்டார், ஆதலின், அவர் அங்கேயே இருப்பாராக; நம் நோயை நமர்காணா தொழிவாராக' வென வருத்தமிகுதி தோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனைக் "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை; வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல்-கற்- 6) என்னும் விதியின் கண் காய்தலின்பாற் படுத்துக.
| என்ன ராயினும் இனிநினை வொழிக |
| அன்ன வாக இனையல் தோழியாம் |
| இன்ன மாகநத் துறந்தோர் நட்பெவன் |