பக்கம் எண் :


124


     (வி - ம்.) குருகு-நாரை; கொக்குமாம். அறுவை - ஆடை. தூவி - சிறகு. மறவி - மறதி. பருவரல் - துன்பம். வெள்ளாங்குருகு, ஆம் : சாரியை. இஃது அழிவில் கூட்டத்தின் கண்ணதாகிய தூது முனிவின்மை.

     ஆங்கண் தீம்புனல் ஈங்கண்பரக்குங் கழனி என்றது அவரூரிலுள்ள இனியபுனலே இங்கு வருதலால் நீ சென்றக்கால் அங்கும் இரையைப் பெறுதற்கியலு மென்றும், கழனியின்புன லீண்டு வருதலால் ஊரும் அணித்தேயாமாதலின் வருந்தா தேகுதற்கியலு மென்றுங் கூறியதாம். அனைய அன்பினையோ வென்றது எம்மூர்வந்துண்ட நன்றிமறவாமல் இனி அவரிடங் கூறுதற்குத் தக்க அத்தகைய அன்புடையையோ வென்றதாம். மெய்ப்பாடு -அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) இஃது இற்செறிக்கப்பட்டுழிக், காப்புச் சிறைமிக்கமையால் தலைவி கையற்றுக் கூறியது என்க. இதனோடு,

  
"கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த 
  
ஆரல் இரைகருதி நித்தலும் நிற்றியால் 
  
ஏரிணர்ப் புன்னைக்கீழ்க் கொண்கன் வருமெனப்  
  
பேருண்கண் நீர்மல்க நின்றாள்மற் றென்னாயோ"  (தொல்-கள- 20 நச், உரை) 

எனவரும் பழம்பாடலையும் நினைக.

(70)
  
     திணை : பாலை.

     துறை : இது, தலைவனைத் தோழி செலவழுங்குவித்தது.

     (து - ம்.) என்பது, தலைவன் தான் பொருள்வயிற் பிரிவதைத் தலைவிக்குணர்த்தும்படி வேண்டத் தோழி, 'நும்பாலுள்ள கண்ணோட்டத்தால் அவள் விடுவிப்பினும் புறாக்கள் ஒன்றனையொன்று புணர்ச்சிக்கு அழைக்கின்ற குரலைக் கேட்டு அவள் பெரிதும் ஆசையாலழிந்து தேயுமாறு அவளைத் தைவந்து விடுத்துப் போதற்கும் வன்மையுடையீரோ' வென்று அவன் செலவழுங்கக் கூறாநிற்பது,

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்," (தொல்-கற்- 9) என்னும் விதிகொள்க.

    
மன்னாப் பொருட்பிணி முன்னி இன்னதை 
    
வளையணி முன்கைநின் இகுளைக்கு உணர்த்தெனப் 
    
பன்மாண் இரத்தி ராயிற் சென்மென 
    
விடுந ளாதலும் உரியள் விடினே 
5
கண்ணும் நுதலும்நீவி முன்நின்று 
    
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் 
    
வகையமர் நல்லில் அகவிறை உறையும் 
    
வண்ணப் புறவின் செங்காற் சேவல்