(து - ம்.) என்பது, உடன்கொண்டு செல்லுந் தலைவன் தலைவியைத் தன் ஆயத்தொடு செல்வாள்போல ஆற்றுவித்துக் கொண்டு செல்கின்றான் நின் அடிகள் நோவாதிருத்தற் பொருட்டு ஆலமரத்தின் கீழே தங்கி இளைப்பாறி, மேலும் செல்லும்போது எங்கெங்கே தங்க விரும்பினும் அஞ்சாது அங்கங்கே தங்கி இளைப்பாறியும் வருந்தாதே கெனக் கூறி மெல்லக்கொண் டேகாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஒன்றாத் தமரினும்" என்னும் நூற்பாவின் கண் 'இடைச்சுரமருங்கின். . . . . . .அப்பாற்பட்ட ஒருதிறத்தானும்
(தொல்-அகத்- (41) ) என்புழி அப்பாற்பட்ட ஒருதிறம் என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| வருமழை கரந்த வால்நிற விசும்பின் | நுண் துளி மாறிய உலவை அம்காட்டு | ஆல நீழல் அசைவு நிக்கி | அஞ்சுவழி அஞ்சாது அசைவுழி அசைஇ 5 | வருந்தா தேகுமதி வாலிழைக் குறுமகள் | இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை | | | | | |