பக்கம் எண் :


147


    (து - ம்,) என்பது, தலைமகன் இரவுக்குறி வருவதறிந்த தோழி அவன் கேட்டு விரைவின் வரைந்துகொள்ளுமாற்றானே தலைவியை நோக்கி, நீ வருந்துவதறிந்த வூரார் அலர் தூற்றினும், மலைநாடன் நின்பாலுள்ள விருப்பினாலே இரவில் கொடிய நெறியில் வருதல் ஏதமுடைத்தாகலின் வாரா தொழிவானாகவென்று கடிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும்பொழுதும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதனுள் வகை என்றதன்கண் அமைத்துக் கொள்க.

    
ஆய்மலர் மழைக்கண் தெண்பனி யுறைப்பவும் 
    
வேய்மருள் பணைத்தோள் விறலிழை நெகிழவும் 
    
அம்பன் மூதூர் அரவ மாயினுங் 
    
குறிவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக் 
5
கன்றுடை வேழம் நின்றுகாத்து அல்கும் 
    
ஆரிருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி 
    
வாரற்க தில்ல தோழி சாரல் 
    
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை 
    
தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி மகிழ்ந்துகொடு 
10
காந்தளஞ் சிறுகுடிப் பகுக்கும் 
    
ஓங்குமலை நாடன்நின் நசையி னானே. 

    (சொ - ள்.) தோழி ஆய் மலர் மழைக்கண் தெள்பனி உறைப்பவும் வேய்மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும் அம்பல் மூதூர் அரவம் ஆயினும் - தோழீ ! அழகிய குவளை மலர்போன்ற குளிர்ச்சியையுடைய நின் கண்களினின்று தெளிந்த நீர் மிக வடிந்து விழவும் மூங்கிலை யொத்த பருத்த தோளிலணிந்த ஏனைய கலன்களை வெற்றி கொள்ளும் வளை நெகிழ்ந்து விழவும், அவற்றை நோக்கிப் பழிகூறும் இப்பழைய வூர் மிக அலர் தூற்றுமாயினும்; சாரல் கானவன் எய்த முளவு மான் கொழுங்குறை தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி மகிழ்ந்து கொடு - மலைச்சாரலிலே கானவன் எய்து கொணர்ந்த முட்பன்றியின் கொழுவிய தசைத் துண்டத்தைத் தேன் மணங்கமழும் கூந்தலையுடைய கொடிச்சி மகிழ்ந்தேற்றுக் கொண்டு; காந்தள் அம் சிறுகுடிப் பகுக்கும் ஓங்குமலை நாடன் நின் நசையினான் - காந்தள் மிக்க சிறு குடியுலுள்ளார் பலர்க்கும் பகுத்துக் கொடாநிற்கும் உயர்ந்த மலை நாட்டையுடைய நங்காதலன் நின்பாலுள்ள விருப்பத்தாலே; குறிவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக் கன்று உடைவேழம் நின்று காத்து அல்கும்-குறுகிய வரிகளையுடைய கரிய புலிக்கு அச்சமுற்று விரைந்து செல்லாத நடையையுடைய தன்கன்றைப் பிடியானை ஆண்டு நின்று காத்துத் தங்காநிற்கும்; ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு