பக்கம் எண் :


150


என்பதனாலுமறிக. பிரிந்து என ஒருசொல் வருவித்து நடுங்கப் பிரிந்து என்க.

    ஒன்றினேம் யாமென் றுரைத்தாரைத் தோள்நெகிழவிடாது குறித்தபருவத்து வந்தமையால் அறவரென்றாள். அறவர் வாழியென்றதனால் 'வாழ்த்தல்' என்னுமெய்ப்பாடு தோன்றிற்று. ஏனை மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல். கைகோள் - கற்பு.

    (பெரு - ரை.) கோங்கம் குவிமுகையவிழ ஈங்கை நற்றளிர் நயவர நுடங்கும் முற்றாவேனிற் றொடக்கத்தே யான் மீண்டுவருவல், வருந்தற்க ! என்று தலைவன் கூறிப்போயினதையே தோழி ஈண்டுக் கொண்டு கூறுகின்றாள் ஆதலின், தாம் குறித்த பருவத்தை மறவாதே வந்தனர்காண் ஆதலால், அவர் அறவோரே என்று பாராட்டினள் என்க.

(86)
  
    திணை : நெய்தல்,

    துறை :இது, வரைவிடைவைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக்கண்டு தோழிக்குரைத்தது.

    (து - ம்,)என்பது, தலைவன் பிரிதலானே ஆற்றாது கனவுகண்டெழுந்த தலைவி தோழியை நோக்கி வௌவால் தான் துயிலும் பொழுது அங்குக் கிட்டப்பெறாத நெல்லியம் புளிச்சுவைக்குக் கனவு கண்டாற்போல அவர் நாட்டுப்பரதவர் மகிழ்ச்சியுங் கானலும் நினைந்த அப்பொழுதிலேயே யானுங் கனவுகாண அஃதொழிதலாகிற்றென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "வரைவிடைவைத்த காலத்து வருந்தினும்" என்னும் (தொல்-கள- 20) விதிகொள்க.

    
உள்ளூர் மாஅத்த முள்ளெயிற்று வாவல் 
    
ஓங்கல் அஞ்சினைத் தூங்குதுயில் பொழுதின் 
    
வெல்போர்ச் சோழர் அழிசியம் பெருங்காட்டு 
    
நெல்லியம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு 
5
அதுகழிந் தன்றே தோழி அவர்நாட்டுப் 
    
பனியரும்பு உடைந்த 1 பெருந்தாள் புன்னை 
    
துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்குஞ் 
    
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் 
    
பெருந்தண் கானலும் நினைந்தவப் பகலே. 

    (சொ - ள்.) தோழி அவர் நாட்டு பெருந்தாள் புன்னை பனிஅரும்பு உடைந்த துறை மேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும் - தோழீ! அத்தலைவரது நாட்டின்கணுள்ள பெரிய அடியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்து அவற்றின் பராகம்

  
 (பாடம்) 1. 
நெடுந்தாள் புன்னை.