பக்கம் எண் :


153


அன்புடைமையாலே தம் வருத்தத்தை அடக்கிக் கொள்ள மாட்டாதே தங்கண்ணீர் அருவியாகப் பெருகும்படி அழாநிற்கும்; உதுகாண் - அதனை உவ்விடத்தே பாராய் ! அவர் மட்டும் இரங்குபவர் அல்லர்; எ - று.

    (வி - ம்.) கடல்விளையமுதம் - ஈண்டு உப்பு. நம்வயின் ஏற்றி, ஏற்றல் - நினைதல்; "ஏற்றம் நினைவுந் துணிவு மாகும்" என்பது (தொல்-சொல்- சூ 337) தம்மோன் - தம்மான். தம் தலைவன்; "தம்மானை யறியாத சாதியா ருளரே" என்றார் தேவாரத்தினும்.

    ஊழ்வினை யூட்டாது கழியாதாகலான் அதனைத் துய்க்குங்காறும் அவரின்பத்தை நாம் அடைதலரி தென்பாள் 'தொல்வினைக் கெவன்பேதுற்றனை' யென்றாள். குன்றமும் அழாநின்றதென்றது அதனினும் அவர் நெஞ்சு வன்மையுடையதெனலுமாம். எவன் பேதுற்றனையென்றது துன்பத்துப் புலம்பல். உருகியுகுதலென்றது ஆங்குநெஞ்சழிதல்.

    கொடுமையுடையோன் குன்றாயிருந்தும் பசித்தவுயிர்களின் பசிகெடப் பழங்களை உதிர்க்கின்றன; இஃதென்ன வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றிற்று. மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) 'உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று' என்பது பற்றி, கற்புச் சிறப்ப நாண் துறந்தாலும் குற்றம் அன்று என்பாள் 'யாம் சென்று உரைத்தனம் வருகம் எழுமதி என்றாள். இனி, யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை" என்னும் தோழியின் அறிவுரை "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால், அல்லற் படுவ தெவன்" என்னும் அருமைத்திருக்குறட் கருத்தினை (குறள் 379) உட்கொண்டிருத்தலும் உணர்க.

(88)
  
    திணை : முல்லை.

    துறை : இது பொருண்முற்றி மறுத்தந்தானெனக்கேட்ட தோழி தலைவிக்குரைத்தது.

    (து - ம்,)என்பது, பொருள்வயிற் சென்ற தலைவன் மீண்டுவந்ததைக் கேள்வியுற்ற தோழி தலைவியை நோக்கி, முன்பு நாள்தோறும் மாலைப்பொழுதில் வருத்தத்தைக் கொடுத்து நம்மைத் துன்புறுத்தும் வாடையானது அவர் வந்தபிறகும் யானையுயிர்த்தாற்போல வருமோ? அங்ஙனம் வரினும் யாதொரு தீங்குஞ் செய்யாதென உவந்து கூறா நிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" என்னும் நூற்பாவின்கண் வரும் மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் என்புழி வந்த பிற என்பதனால் அமைத்துக்கொள்க.

    
கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர் 
    
திரைப்பிதிர் கடுப்ப முகடுகந் தேறி