| நிரைத்துநிறை கொண்ட கமஞ்சூன் மாமழை |
| அழிதுளி கழிப்பிய அழிபெயற் கடைநாள் |
5 | இரும்பனிப் பருவத்த மயிர்க்காய் உழுந்தின் |
| அகலிலை அகல வீசி இகலாது |
| அல்கலும் அலைக்கும் நல்கா வாடை |
| பரும யானை அயாவுயிர்த் தாஅங்கு |
| இன்னும் வருமே தோழி வாரா |
10 | வன்க ணாளரோடு இயைந்த |
| புன்கண் மாலையும் புலம்புமுந் துறுத்தே. |
(சொ - ள்.) தோழி கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர் திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி - தோழீ ! கீழ்க்காற்றுச் செலுத்துகையினாலே ஆகாயத்திற் செறிவுற்று அலையிலுள்ள பிசிர்போல மலையினுச்சியை விருப்பத்தோடு ஏறி; நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை - ஒழுங்காக அமைந்து நிறைவுற்ற நிரம்பிய சூலையுடைய கரிய மேகம்; அழிதுளி கழிப்பிய பெயல் அழி கடைநாள் - மிக்க மழையைப் பெய்தொழிந்த மழை அழிந்த கார்ப்பருவத்தின் இறுதியில்; இரும்பனிப் பருவத்த மயிர்க்காய் உழுந்தின் அகல்இலை வீசி - மிக்க முன்பனிப் பருவத்தில் மயிர்கள் அமைந்த உழுந்தின் அகன்ற இலைகளெல்லாம் சிதையும்படி வீசி; அகலாது அல்கலும் அலைக்கும் நல்கா வாடை - நம்மை விட்டு நீங்காது நாள்தோறும் வருத்துகின்ற அன்பு செய்யாத வாடைக் காற்றானது; வாரா வன்கணாளரொடு இயைந்த புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்து - இதுகாறும் வாராதிருந்த வன்கண்மையுடைய தலைவரோடு ஒருபடியாயமைந்த துன்பத்தைச் செய்யும் மாலைப் பொழுதையும் வருத்தத்தையும் முற்பட விட்டுக்கொண்டு; பரும யானை அயாவுயிர்த்தாங்கு இன்னும் வரும் - பருமம் பூண்ட யானையானது தன் அயர்ச்சியாலே பெருமூச்சு விட்டாற்போல அவர் வந்த பிறகு இன்னும் வாராநிற்குமோ ? அங்ஙனம் வந்தாலும் யாதொரு தீங்கையுஞ் செய்யாதுகாண் !; எ - று.
(வி - ம்.) கொண்டல் - கீழ்க்காற்று. பிதிர் - சிறுதுளிகளாகிய பிசிர். கமம் -நிறைவு. கார்ப்பருவத்தினிறுதியில் வீசி வருத்துகின்ற வாடையெனக் கூட்டுக. யானை அயாவுயிர்த்தது சினையொடு முதல்வந்த வினையுவமம். பருமம் - யானை முதுகிலிடுந்தவிசு.