பக்கம் எண் :


155


    (பெரு - ரை.) இனி இதனைத் தலைவி பருவங்கண்டழிந்து தன்னை ஆற்றுவிக்குந் தோழிக்குக் கூறியது எனினுமாம்.

(89)
  
    திணை : மருதம்.

    துறை : இது, தோழி தலைமகளுக்குரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயின்மறுத்தது.

    (து - ம்,) என்பது, பரத்தையிற்பிரிந்த தலைமகனால் விடுக்கப்பட்டு வாயில் வேண்டிவந்த பாணன் கேட்பத் தோழி தலைமகளை நோக்கி நின் காதலன் முயங்கும் பரத்தையருள் பெண்டன்மையறியாப் பெதும்பைப் பருவத்தாளொருத்தி ஊசலாடாது அழுது நிற்பதை ஆற்றுவித்து, மீட்டும் ஆடச்செய்யாத அவனது அவை பயனுடையதன்று; அவளழுதூடினமையின் இங்கு வந்தான்போலுமென வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "பாணர்கூத்தர் விறலியர் என்றிவர், பேணிச் சொல்லிய குறைவினை எதிரும், என்னும் (தொல்-கற்- 9 ) விதி கொள்க.

    
ஆடியல் விழவின் அழுங்கன் மூதூர் 
    
உடையோர் பான்மையின் பெருங்கை தூவா 
    
வறனில் புலத்தி எல்லித் தோய்த்த 
    
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு 
5
வாடா மாலை துயல்வர ஓடிப் 
    
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்  
    
பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள் 
    
அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி 
    
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் 
10
ஊசல் ஊறுதொழிற் பூசல் கூட்டா 
    
நயனின் மாக்களொடு குழீஇப் 
    
பயனின்று அம்மவிவ் வேந்துடை அவையே.