(து - ம்.) என்பது, வரைபொருட்பிரிந்த தலைமகன் பகற்பொழுதையில் வெளிப்படையாக வருதலானே, வரையக்கருதினன்போலுமென்றுணர்ந்த தோழி, தலைவியை நோக்கிச் சேர்ப்பன் பகற்காலத்திலே பலருங்காண இங்கு வருதலை நீ யறிந்தனையன்றோவெனக் குறிப்பால் வரைவுமலிதலை மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "ஆங்கு அதன் தன்மையின் வன்புறையுளப் பட" என்பதன்கண் (தொல்-கள- 23) அமைத்துக்கொள்க.