(து - ம்,) என்பது தலைவன் பிரிதலால் வருந்திவேறுபட்ட தலைவியைத் தோழிநோக்கி, ஆனிரையுண்ணவிட்ட நீர்ப்பத்தரைத் திறந்து களிறு தன் கன்றும் பிடியுமுண்ணக் கொடாநிற்குஞ் சுரத்தின்கண்ணே சென்ற தலைவர், நம்மைக் கருதினாரில்லைபோலும், ஆதலின் அவர் திறத்து வருந்தியாவதென்னையென அவள் ஆற்றும் வண்ணம் தெளியக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி'(தொல்-கற்- 6.) என்பதனால் அமைத்துக்கொள்க.
| உள்ளார் கொல்லோ தோழி துணையொடு |
| வேனில் ஓதிப் பாடுநடை வழலை |
| வரிமரல் நுகும்பின் வாடி அவண |
| வறன்பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன் |
5 | வேட்டச் சீறூர் அகன்கண் கேணிப் |
| பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப் பத்தர் |
| புன்தலை மடப்பிடி கன்றோடு ஆர |
| வில்கடிந்து ஊட்டின பெயரும் |
| கொல்களிற்று ஒருத்தல் சுரன்இறந் தோரே. |
(சொ - ள்.) தோழி வேனில் பாடு நடை ஓதி வழலை துணையொடு வரி மரல் நுகும்பின் வாடி அவண - தோழீ ! முதுவேனிற்காலத்து வருந்திய நடையையுடைய ஓந்தியாகிய வழலை தன் துணையோடு வரிகளையுடைய மரலின் இளமடல் போல வாட்டமுற்று அவ்விடத்திற் கிடத்தலையுடைய; வறன் பொருந்து குன்றத்து