(து - ம்.) என்பது, இயற்கைப் புணர்ச்சி இறுதியில் ஆயத்தொடு கூடிய தலைமகளை அவ் வாயத்தார் செய்யும் வழிபாடறிந்த தலைமகன், இவள் யார் மகளென வியந்து இவள் எனக்கு எய்தற்கரியளாமென ஆற்றானாகி, இத்தகைய புதல்வியைப் பெற்று எனக்குதவிய இவள் தந்தையும் தாயும் வாழ்க வென வாழ்த்தா நிற்பது.
(இ - ம்.) இதனை, "மெய் தொட்டுப் பயிறல்", (தொல்-கள- 11) என்னும் நூற்பாவின்கண் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுவழி என்பதன்கண் "சொல்லிய" என்ற மிகையான் தலைவி நீங்கியழிப் பிறந்த வருத்தத்தைத் தலைவன் கூறியதென அமைத்துக்கொள்க.
| அல்குபட ருழந்த அரிமதர் மழைக்கண் |
| பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல் |
| திருமணி புரையு மேனி மடவோள் |
| யார்மகள் கொல்லிவள் தந்தை வாழியர் |
5 | துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல் |
| அரிவனர் அரிந்துந் தருவனர் பெற்றுந் |
| தண்சேறு தாஅய் மதனுடை நோன்தாள் |
| கண்போல் நெய்தல் போர்விற் பூக்குந் |
| திண்டேர்ப் பொறையன் தொண்டி |
10 | தன்திறம் பெறுகஇவள் ஈன்ற தாயே. |